மேலும் அறிய

நாகை: மாற்று சான்றிதழ் வழங்க கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளருக்கு எதிராக திரண்ட ஆசிரியர்கள்!

நாகையில் உள்ள அரசு உதவிபெறும் தூய அந்தோனியார் மேல்நிலை பள்ளி தாளாளர் மாற்று சான்றிதழ் வாங்க வரும் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டாயக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

நாகையில் உள்ள அரசு உதவிபெறும் தூய அந்தோனியார் மேல்நிலை பள்ளி தாளாளர் மாற்று சான்றிதழ் வாங்க வரும் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டாயக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவுகிறது. 
 
நாகை நகர் பகுதியில் அரசு உதவி பெறும் தூய அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பழமையான பள்ளியின் தாளாளராக பாதிரியார் டேவிட் செல்வகுமார் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரி படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் ஏற்கனவே மாற்று சான்றிதழ் பெறாமல் உள்ள மாணவர்களிடம் பள்ளி தாளாளர் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு அதிக அளவிலான கட்டணம் விதித்து அதில் பாதியாவது கட்ட வற்புறுத்துவதாக  புகார் எழுந்துள்ளது. மாற்றுச் சான்றிதழை கொடுப்பதற்கு குறைந்தபட்ச தொகையாக 50 ரூபாய்க்கும் கீழ் வசூல் செய்ய வேண்டும் என அரசு உத்தரவு இருந்து வரும் நிலையிலும், பள்ளியின் தாளாளர் 2000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை ஏழை மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் பணம் கட்ட வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

நாகை: மாற்று சான்றிதழ் வழங்க கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளருக்கு எதிராக திரண்ட ஆசிரியர்கள்!
 
மேலும் இதற்கு பள்ளியின் தலைமையாசிரியர் துணையாக இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாளாளர் டேவிட் செல்வகுமார் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த என்சிசி அமைப்பை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ள ஆசிரியர்கள், மீண்டும் பள்ளியின் வளர்ச்சிக்காக என்சிசி அமைப்பை உருவாக்கி மாணவர்களின் நலன்களைக் காக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நாகையில் பள்ளியின் தாளாளர் ஏழை-எளிய மாணவர்களிடம் அதிகளவிலான பணத்தை மாற்றுச் சான்றிதழை பெறுவதற்காக வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

 

ஆந்திரா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை நாகையில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

நாகை: மாற்று சான்றிதழ் வழங்க கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளருக்கு எதிராக திரண்ட ஆசிரியர்கள்!
 
 
 
ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தனிப்படை பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நாகை புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை ரயில் நிலையம் அருகே பழைய பேருந்து நிறுத்தத்தில்  இருந்து வேளாங்கண்ணி செல்லும் பேருந்தில் ஏற முயன்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்தனர். அப்போது அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நாகை நகர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 

நாகை: மாற்று சான்றிதழ் வழங்க கூடுதல் கட்டணம்: பள்ளி தாளாளருக்கு எதிராக திரண்ட ஆசிரியர்கள்!
 
இதில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த தங்கமாயன் இவரது மனைவி ஓச்சம்மா. இவர்கள் இரண்டு பேரும் தற்போது கர்நாடகா மாநிலம் ரெய்சூர் தாலுகா சக்தி நகரில் வசிப்பது தெரியவந்தது. இந்த இரண்டு பேரும் இணைந்து ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் விஜயநகர் பிப்ரபள்ளி அக்ரகாரத்தை சேர்ந்த அய்யர்சாமி என்பருடன் சேர்ந்த ரயில் மூலம் திருச்சி வந்தனர். அங்கிருந்து பஸ் ஏறி 22 கிலோ கஞ்சாவை எடுத்து கொண்டு நாகை வந்தனர். நாகையில் இருந்து கஞ்சா பொட்டலங்களை இலங்கை அனுப்ப இருந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget