மேலும் அறிய

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்

’’விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வரால் மட்டுமே 40 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை’’

நாகை அடுத்த பனங்குடியில் கடந்த 1992 ஆம் ஆண்டு சி.பி.சி.எல்.,நிறுவனம் துவக்கப்பட்டது. இதற்காக கையகப்படுத்திய  விளைநிலங்களில் 400 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டதால், கருவேல மரங்கள் காடாக மாறியுள்ளது. இதனால் நிலத்தடி நீ பாதிக்கப்பட்டு குடிநீருக்கே அல்லல்படும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் விவசாயிகள் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆலை 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 2 ஆம் கட்ட விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்களில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கடந்த 12ஆம் தேதி 5 ஊராட்சிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அவர்களது கருப்பு கொடி ஏற்றியும்,தொடர்ந்து சி.பி.சி.எல்., ஆலையின் வாசலில் இருந்து  கருப்பு கொடியுடன் வாகனங்களில் பேரணியாக புறப்பட்டு விவசாய நிலத்தையும் விவசாயத்தையும் விவசாய தொழிலாளர்களின் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைக்கு சிபிசி எல் நிர்வாகம் பாக்காமல்  5 ஊராட்சிகளிலும் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
இந்த நிலையில் ஆலை விரிவாக்க பணிகளை பார்வையிட சி.பி.சி.எல் நிறுவன சேர்மன் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா இன்று வருகை தந்தார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், பனங்குடி சி.பி.சி.எல் நிறுவனர் நுழைவுவாயில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் விவசாயிகள் தங்களது நிலங்களையும் இருப்பிடத்தையும் விட்டு வேறு பகுதிகளுக்கு அகதிகளாக செல்ல இருப்பதாக கூறி  ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை விரிவாக்க பணிகளுக்காக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி நிலம் கையகப் படுத்த முயலும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை: பனங்குடியில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்-முதல்வர் தலையிடக்கோரி விவசாயிகள் போராட்டம்
 
விவசாயிகள் மீது அக்கறை உள்ள தமிழக முதல்வரால் மட்டுமே 40 கிராமத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கும் கிராம மக்கள் இவ்விவகாரத்தில்   தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.  உடனடியாக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து தங்களையும் விவசாய நிலத்தையும் காப்பாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.