மேலும் அறிய

வருதுங்க... சென்னைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 11ம் தேதி முதல் சென்னைக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும்: எம்பி முரசொலி

தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 11ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் வழியாக திருச்சி - சென்னை இடையே பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வரும் 11ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. மேலும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழனிக்கு நேரடி ரயிலும் விரைவில் இயக்கப்படும் என்று தஞ்சாவூர் எம்.பி., முரசொலி தெரிவித்தார்.

நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்

தஞ்சாவூரில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்.பி., முரசொலி நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மக்களின் நீண்ட நாள் ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக, ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் நான் நான்கு முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தேன்.

மேலும், மத்திய ரயில்வே துறை அமைச்சர், நிர்வாக குழு தலைவர், தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதில் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு பகல்நேர இன்டர் சிட்டி ரயில் இயக்குவது, திருச்சி - பாலக்காடு, திருச்சி - ஹவுரா ரயில்களை தஞ்சாவூரில் இருந்து இயக்க வேண்டும். மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதி மக்களுக்காக கம்பன் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக செல்லும் ராமேஸ்வரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைளை வைத்தோம். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் மூலம் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மூன்று இடங்களில் ஒரு நிமிட நிறுத்தம் தொடர்பாக கேட்கப்பட்டு இருந்தது. இதில் செஹந்தரபாத் – ராமநாதபுரம் ரயிலை பேராவூரணியில் ஒரு நிமிடம் நிறுத்தவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.


வருதுங்க... சென்னைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 11ம் தேதி முதல் சென்னைக்கு பகல் நேரத்தில் இயக்கப்படும்: எம்பி முரசொலி

தஞ்சை- தாம்பரத்துக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கம்

நமது கோரிக்கை அடிப்படையில், திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு திங்கள் கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பகல்நேர இன்டர் சிட்டி ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். வரும் 11ம் தேதி முதல் மூன்று மாதம் இந்த ரயில் சோதனை ஓட்டமாக திருச்சியில் அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு காலை 6:25 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், திண்டிவனம், விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு மதியம் 12.35 மணிக்கு சென்றடையும்.

பின்னர் மறுமார்க்கத்தில் இருந்து மாலை 3:35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து ரயில் புறப்பட்டு, இரவு 10.15 மணிக்கு தஞ்சாவூருக்கும், 11.35 மணிக்கு திருச்சிக்கும் சென்றடையும் என தெரிவித்துள்ளனர்.  இதை சோதனை ஓட்டமாக இல்லாமல் தொடர்ந்து இயக்க கோரிக்கை வைத்துள்ளோம். மக்கள் பயன்பட்டினை பொறுத்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

பழனிக்கு நேரடி ரயிலும் விரைவில் கிடைக்கும்

மேலும், திருச்சியில் இருந்து பழனி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை தஞ்சாவூரில் இருந்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தஞ்சாவூரில் சிக்னல் இடர்பாடுகள் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வழியாக பாலக்காடு ரயிலை இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாக ரயில்வே துறையில் கூறியுள்ளனர். கூடிய விரைவில் அந்த ரயில் நமக்கு கிடைக்கும்.

விரைவில் எம்பி., அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டனா குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலகம் தொடர்பான மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget