மேலும் அறிய

காலை உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியாக கூறுவதுதான் திட்டத்தின் வெற்றி - அமைச்சர் பெருமிதம்

பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக கூறுவது தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம் என்று தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தஞ்சாவூர்: பள்ளி குழந்தைகள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக கூறுவது தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம் என்று தஞ்சையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் 416.13 லட்சம் மதிப்பில் 22 புதிய பல்வேறு துறை சார்ந்த அரசுக் கட்டடத்தை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் திறந்துவைத்தார்.

தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் வெண்டையம்பட்டி ஊராட்சி வடுகன்புதுப்பட்டியில் ரூ.10.93 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம், காங்கேயம்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், வடக்குபாளையப்பட்டி ஊராட்சி உசிலம்பட்டியில் ரூ.10.93 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், சானூரப்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

இதேபோல் செங்கிப்பட்டி ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும், புதுப்பட்டிஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும்,தஞ்சாவூர் வட்டம், மருதகுடி ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், பூதலூர் வட்டம், திருக்காட்டுப்பள்ளியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமும், அக்கரைபேட்டைஊராட்சியில் ரூ.21லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடமும்,ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதியகட்டிடமும், திருவையாறு வட்டம், சாத்தனூர் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், மரூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மைய புதியகட்டிடமும், திருப்பழனம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிமையபுதியகட்டிடமும் திறக்கப்பட்டது.


காலை உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகள் மகிழ்ச்சியாக கூறுவதுதான் திட்டத்தின் வெற்றி - அமைச்சர் பெருமிதம்

 

கண்டியூர் ஊராட்சியில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடமும், கண்டியூர் ஊராட்சியில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் புதிய உணவு தானிய சேமிப்பு கிடங்கு மைய கட்டிடமும் என 22 புதிய கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 

பள்ளி குழந்தைகளை சந்திக்கும்போது அவர்கள் காலை உணவு திட்டத்தை பற்றி மகிழ்ச்சியாக தெரிவிப்பது அந்த வார்த்தைகள் தான் திட்டத்தின் வெற்றியாக பார்க்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்த உயர்கல்வித்துறை ஆசிரியர்கள் இங்கு வந்து பார்த்து இத்திட்டத்தை தெலுங்கானாவிலும் தொடங்கவிருக்கிறோம் எனக் கூறி இருக்கிறார்கள். எனவே திட்டம் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.

சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார். யார் மனதையும் புண்படுத்தவில்லை. அதிலுள்ள கருத்தியல் கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். சமநீதியும் சமதர்மமும் இல்லாத அந்த கோட்பாடுகளை தான் நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

பிள்னர் தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டையில் திமுக மத்திய மாவட்டம் வடக்கு ஒன்றியம் சார்பாக சீரமைக்கப்பட்ட கலைஞரின் பொதுவாழ்வு பொன்விழா வளைவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவிற்கு திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். இந்த பொன்விழா வளைவானது 1989 ம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது மறு சீரமைக்கப்பட்டு இந்த வளைவில் அண்ணா மற்றும் கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பொன்விழா வளைவு தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் அம்மன்பேட்டை ஆகிய மூன்று இடத்தில் மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget