மேலும் அறிய

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு: எதற்காக?

மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை.

தஞ்சாவூர்: மொழி என்று வரும்போது அவரவர் தாய்மொழி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒரு கருத்தாக தான் அதை நான் பார்க்கிறேன் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில் மழை நீர் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருட்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தின் தலைவர் என்ற முறையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சரஸ்வதி மஹால் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து வருகிறோம். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சில கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். புதிய கட்டிடம் கட்டி இங்கு இருந்து ஒரு சில தளவாடங்களை இடமாற்றம் செய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு: எதற்காக?

நூலகத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய தகவல் மூலம் தான் ஓலைச்சுவடியாக இருந்தாலும் சரி காகித அச்சு வழியாக இருந்தாலும் சரி பல செய்திகள் நம்மால் எடுக்க முடிகிறது. நாம் யார் என்ற செய்தியை தரக்கூடியது இந்த ஓலைச்சுவடிகள் தான். புதிதாக கட்டிடம் கட்ட என்ன நிதி தேவை என்பது குறித்து மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். அது குறித்து பரிசீலிக்கப்படும். பள்ளி திறக்கப்படுகிறது அன்றே  புத்தகங்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது. 

நூலகம் குறித்து கலெக்டர் தெரிவித்த தகவல்கள் அனைத்தையும் அமைச்சரிடம் எடுத்துக் கூறப்படும். இதை காக்க வேண்டியது சீர்படுத்த வேண்டியது நமது மிகப்பெரிய கடமை. எனவே ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் ஏதாவது ஒரு பணிகளை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். தமிழக முதல்வரிடம் தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் வழங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். மொழி என்று வரும்போது அவரவர் தாய்மொழி காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல ஒரு கருத்தாக தான் அதை நாம் பார்க்க வேண்டும்.

இந்த நூலகத்தில் மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை. இந்த நூலகத்தில் தற்போது போதுமான பணியாளர்கள் உள்ளனர். இன்னும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வர் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது. அரசு பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தான் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ். மார்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget