மேலும் அறிய

யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

திருவையாறு புறவழிச்சாலை பிரச்னை குறித்து கண்டிப்பாக மாவட்ட நிர்வாகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே கண்டியூரில் கால்நடை மருந்தகக் கட்டடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள், மனுக்களை தொடர்ந்து, கடந்த ஆண்டு மக்கள் நலனுக்கான பல்வேறு அடிக்கல்லை முதல்வர் நாட்டினார். இதேபோல, ஏறத்தாழ 40,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மனுக்கள் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகத்துக்கு வருகிற கோரிக்கைகள் அடிப்படையிலும் அந்தந்த பகுதிக்குத் தேவையான கட்டடங்களை, குறிப்பாக விவசாயிகளுக்குத் தேவையான கட்டடங்களைத் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 2.27 கோடி மதிப்பில் அங்கன்வாடி உள்பட 9 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து, கட்டுமான பணி முடிவடைந்த கட்டடங்களையும் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுபோல, மக்களுக்குத் தேவையான பணிகளைத் தமிழக அரசு உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

புயலுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைவரும் அறிந்துள்ளனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் புயல் வருவதற்கு முன்பும், மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படும்போதும் எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். மழை பெய்தால் பள்ளியில் தண்ணீர் தேங்காதவாறு ஒன்றிய அலுவலகம் மூலம் மோட்டார்களை தயார் நிலையில் வைப்பது, இடியும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்றுவது என்பன போன்ற பள்ளிக் கல்வித் துறை நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைச் செயல்படுத்தி வருகிறோம்.

பள்ளிக்கு வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்காகவே செய்யப்படுகிறது. அதேசமயம் விவசாயிகள் பாதிக்காத வகையிலும் மேற்கொள்ளப்படுகிறது. திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தில் இரண்டு, மூன்று தரப்பில் ஒவ்வொரு கருத்துகளைக் கூறுகின்றனர். இத்திட்டம் வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் வேண்டாம் என தெரிவிக்கின்றனர்.


யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூக தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

இந்த அரசு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. எனவே, கண்டிப்பாக மாவட்ட நிர்வாகத்தின் தலைமையில் அமர்ந்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகத் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
பூதலூர், திருவையாறு, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு எம்எல்ஏ., துரை. சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget