மேலும் அறிய

விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பரிசு - அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்று ரூ.1 லட்சம் பரிசினை வென்றுள்ளது.

விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் தமிழக அரசு பரிசு தொகை வழங்கியுள்ளதாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டியின் அரையிறுதி போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கபாடி போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 27- ம் தேதி முதல்  துவங்கி நடைபெற்ற வருகிறது. நாக்அவுட் முறையில் பகல், இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை, திருவாரூர், கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 


விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பரிசு -  அமைச்சர் மெய்யநாதன்

இதில் தமிழ்நாடு காவல்துறை அணி, வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ்அணி, சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி, திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. தமிழ்நாடு காவல்துறை அணியும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் பங்கேற்ற முதலாவது அரையிறுதி போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த போட்டிகளை ஆரவாரத்துடன் கபாடி போட்டி வீரர்களை உற்சாகப்படுத்தி ஏராளமான கபாடி ரசிகர்கள் கண்டு ரசித்தனர். 


விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பரிசு -  அமைச்சர் மெய்யநாதன்

முன்னதாக போட்டியை துவங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ”இந்தியா திரும்பி பார்க்கும் அளவில் தமிழ்நாடு  வீரர்கள் விளையாட்டுதுறையில் பல சாதனைகளை படைத்து வருவதற்கு காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததே. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றால் 3 கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கத்திற்கு 2 கோடி ரூபாயும், வெண்கலப்பதக்கத்திற்கு 1 கோடி ரூபாயும் தமிழக அரசு வழங்குகிறது. அதேபோல வெளிநாடுகளில் தேசிய அளவில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு  24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை வீரரின் வங்கி கணக்கில் செலுத்தும் திட்டமும் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 100 கோடி ரூபாய் பரிசுதொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது” என பெருமையுடன் கூறினார்.


விளையாட்டு துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பரிசு -  அமைச்சர் மெய்யநாதன்

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி,  சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி தோற்கடித்து முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்று 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றது. சென்னை கட்டங்குடி பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து  70 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து  40 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா. முருகன் எம்.எல்.ஏ வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget