மேலும் அறிய

100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்

’’வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை கூலியாக பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்’’

டெல்டா மாவட்டங்களில் நுாறு நாள் திட்ட பணிகளில், பிற பணிகளில், உள்ளூர் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், விவசாயப் பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய தொழிலாளர்கள்  அதிக சம்பளம் கேட்கிறார்கள.  விவசாய பணிக்கு ஆட்கள் பற்றைகுறை ஏற்படுவதால், 100 நாட்கள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள்  வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு கட்டுமானம், பொருள்கள் விற்பனை என ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள். விவசாயப் பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, விவசாய பணிகளிலும் தங்களை தடம் பதித்துள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதிகளில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண் விவசாய கூலித் தொழிலாளர்கள் குழுவாக தங்கிருந்து, நெல் நடவுப் பணிகளை செய்து வருகிறனர்.

விவசாய கூலி பெண் தொழிலாளர்கள்  நெல் நடவுப் பணிகளை மட்டுமே செய்வார்கள், அவர்களுக்கு நாற்றுகளைப் பறித்து தருவதற்கும்,  டிராக்டர் ஒட்டுவதற்கும், உரமிடும் பணிகளையும் ஆண் விவசாய தொழிலாளர்கள் செய்வார்கள், விவசாய பணிகளை ஆண் பெண் என தனியாக செய்த வருகிறார்கள். இதனால் ஏக்கருக்கு குறைந்தது 10 ஆயிரம் வரை செவாகும்  நிலை உள்ளது. ஆனால் வெளி மாநிலமான மேற்குவங்க தொழிலாளர்கள், அவர்களாகவே,  நாற்றுகளை பறித்து, உரமிட்டு, டிராக்டர்களை ஒட்டி, நடவுப் பணிகளை மேற் கொள்கின்றனர். இவர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை மட்டுமே கூலியாக பெறுகின்றனர். கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் அருகே சக்கரசமாந்தம், தென்னங்குடி, சீராளூர், கள்ளப்பெரம்பூர் என சுற்று வட்டார கிராமங்களில் 15 பேர் கொண்ட குழுவினர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளில் 4 முதல் 5 ஏக்கர் விதம், கயிறு கட்டி மிக இடைவெளி விட்டு, மிகவும் நேர்த்தியாக பணிகளை மேற்கொள்கின்றனர்.


100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்

இது குறித்து சக்கரசாமந்தம் சேர்ந்த விவசாயி கூறுகையில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர் நாற்றுகளைப் பறித்து, நடவு செய்கின்றனர். பணிகளை விரைந்தும், மிக நேர்த்தியாக  செய்து முடித்து விடுகின்றனர். நமது பகுதியில் நிலவும் ஆள் பாற்றாக்குறை, சம்பளம் போன்ற பிரச்சனைக்கு இது ஒரு தீர்வு அமைந்துள்ளது. விலை உயர்வு கூலி பற்றாகுறையினால், பெரும்பாலான விவசாயிகள் மாற்று தொழிலுக்கும், திருப்பூர் போன்ற வெளி மாவட்டத்திற்கும் சென்று விட்டார்கள். இதனால் விவசாய பணிக்கு ஆய்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஆட்கள் இருந்தாலும், 100 நாள் வேலை இருப்பதால் யாரும் வருவதில்லை. வந்தாலும், அவர்கள் கூலியை உயர்த்தியும், பல்வேறு நிபந்தனைகளை தெரிவிக்கின்றனர். ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தர்கள், பேசிய பணம் கொடுத்தால், சொன்னபடி வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறார்கள் என்றார். மேற்கு வங்க விவசாய கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சீசன் நேரங்களில் சென்று நடவுப் பணிகளை மேற்கொள்வோம். அதன்படி இப்பகுதியில் விவசாயப் பணிகள் நடைபெறுவதால், இங்கு வந்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாய வேலை இல்லாத போது, கட்டிடம், மொசைக் போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்ப்போம் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
Embed widget