மேலும் அறிய

100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்

’’வடமாநிலத் தொழிலாளர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை கூலியாக பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்’’

டெல்டா மாவட்டங்களில் நுாறு நாள் திட்ட பணிகளில், பிற பணிகளில், உள்ளூர் பணியாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால், விவசாயப் பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய தொழிலாளர்கள்  அதிக சம்பளம் கேட்கிறார்கள.  விவசாய பணிக்கு ஆட்கள் பற்றைகுறை ஏற்படுவதால், 100 நாட்கள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள்  வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திற்கு கட்டுமானம், பொருள்கள் விற்பனை என ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள். விவசாயப் பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, விவசாய பணிகளிலும் தங்களை தடம் பதித்துள்ளனர். இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதிகளில், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஆண் விவசாய கூலித் தொழிலாளர்கள் குழுவாக தங்கிருந்து, நெல் நடவுப் பணிகளை செய்து வருகிறனர்.

விவசாய கூலி பெண் தொழிலாளர்கள்  நெல் நடவுப் பணிகளை மட்டுமே செய்வார்கள், அவர்களுக்கு நாற்றுகளைப் பறித்து தருவதற்கும்,  டிராக்டர் ஒட்டுவதற்கும், உரமிடும் பணிகளையும் ஆண் விவசாய தொழிலாளர்கள் செய்வார்கள், விவசாய பணிகளை ஆண் பெண் என தனியாக செய்த வருகிறார்கள். இதனால் ஏக்கருக்கு குறைந்தது 10 ஆயிரம் வரை செவாகும்  நிலை உள்ளது. ஆனால் வெளி மாநிலமான மேற்குவங்க தொழிலாளர்கள், அவர்களாகவே,  நாற்றுகளை பறித்து, உரமிட்டு, டிராக்டர்களை ஒட்டி, நடவுப் பணிகளை மேற் கொள்கின்றனர். இவர்கள் ஒரு ஏக்கருக்கு 5,000 வரை மட்டுமே கூலியாக பெறுகின்றனர். கடந்த சில வாரங்களாக தஞ்சாவூர் அருகே சக்கரசமாந்தம், தென்னங்குடி, சீராளூர், கள்ளப்பெரம்பூர் என சுற்று வட்டார கிராமங்களில் 15 பேர் கொண்ட குழுவினர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒரு நாளில் 4 முதல் 5 ஏக்கர் விதம், கயிறு கட்டி மிக இடைவெளி விட்டு, மிகவும் நேர்த்தியாக பணிகளை மேற்கொள்கின்றனர்.


100 நாள் வேலைத்திட்டத்தால் உள்ளூர் ஆட்கள் டிமாண்ட் - தஞ்சையில் நெல் நடவு செய்யும் வடமாநில தொழிலாளிகள்

இது குறித்து சக்கரசாமந்தம் சேர்ந்த விவசாயி கூறுகையில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர் நாற்றுகளைப் பறித்து, நடவு செய்கின்றனர். பணிகளை விரைந்தும், மிக நேர்த்தியாக  செய்து முடித்து விடுகின்றனர். நமது பகுதியில் நிலவும் ஆள் பாற்றாக்குறை, சம்பளம் போன்ற பிரச்சனைக்கு இது ஒரு தீர்வு அமைந்துள்ளது. விலை உயர்வு கூலி பற்றாகுறையினால், பெரும்பாலான விவசாயிகள் மாற்று தொழிலுக்கும், திருப்பூர் போன்ற வெளி மாவட்டத்திற்கும் சென்று விட்டார்கள். இதனால் விவசாய பணிக்கு ஆய்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. ஆட்கள் இருந்தாலும், 100 நாள் வேலை இருப்பதால் யாரும் வருவதில்லை. வந்தாலும், அவர்கள் கூலியை உயர்த்தியும், பல்வேறு நிபந்தனைகளை தெரிவிக்கின்றனர். ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தர்கள், பேசிய பணம் கொடுத்தால், சொன்னபடி வேலையை முடித்து விட்டு வந்து விடுகிறார்கள் என்றார். மேற்கு வங்க விவசாய கூலித் தொழிலாளர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடக, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் சீசன் நேரங்களில் சென்று நடவுப் பணிகளை மேற்கொள்வோம். அதன்படி இப்பகுதியில் விவசாயப் பணிகள் நடைபெறுவதால், இங்கு வந்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விவசாய வேலை இல்லாத போது, கட்டிடம், மொசைக் போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் பார்ப்போம் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.