மேலும் அறிய

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15ஆம் தேதி கடைசி நாள் - வேளாண்துறை அறிவிப்பு

காரி பருவத்தில் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை 3,180 ரூபாயை தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம்.

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடியாகும். இந்நிலையில் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முறையாக வராத காரணத்தினால், மேட்டூர் அணை கடந்த பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடலாம் என விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி இல்லாத காலங்களில் குறைந்த அளவில் தண்ணீரை பயன்படுத்தி செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வாழை, கரும்பு, பருத்தி, உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், வருவாயை நிலைப்படுத்தவும், தமிழ்நாட்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15ஆம் தேதி கடைசி நாள் - வேளாண்துறை அறிவிப்பு
 
இந்த நிலையில் மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் காரீப் 2021இல் செயல்படுத்த அக்ரிகல்சரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனமாக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தில் காரிப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட வலங்கைமான் வட்டாரத்தில் ஆவூர் சரகத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே காரிப் பருவத்தில் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு காப்பீட்டு பிரீமியம் தொகை 3180 ரூபாயை தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் மூலமாகவோ, தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்துகொள்ளலாம். மேலும் கடன் பெறாத விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான சிட்டா அடங்கல் கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அல்லது தேசிய வங்கியில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

வாழை பயிருக்கு காப்பீடு செய்ய செப்.15ஆம் தேதி கடைசி நாள் - வேளாண்துறை அறிவிப்பு
 
மேலும் விவரங்களுக்கு வலங்கைமான் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கைபேசி எண் 8489364388, மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர்களை கைப்பேசி எண் 7975731586 உள்ளிட்ட தொலைபேசி எண்கள் மூலம் விவசாயிகள் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். வாழை பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ஆகும் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பாதுகாக்க காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget