மேலும் அறிய

கும்பகோணத்தில் வாலிபரை கடத்திய வழக்கில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது

வாலிபரை கடத்திய வழக்கில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. தலைமைக் கழக பெண் பேச்சாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர்: வாலிபரை கடத்திய வழக்கில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அ.தி.மு.க. தலைமைக் கழக பெண் பேச்சாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா பாலக்கரை பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சுபாஷ். இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 21-ந் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி சுபாஷ் வீட்டிற்கு காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் சுபாஷ் குறித்து கேட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து சுபாஷின் சகோதரர் சுரேஷ்குமார் (31) எதற்காக விசாரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாத அந்த மர்ம கும்பர் சுரேஷ்குமாரை மிரட்டி கடத்தி சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.


கும்பகோணத்தில் வாலிபரை கடத்திய வழக்கில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் உட்பட 8 பேர் கைது

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட சுரேஷ்குமாரை தேடி வந்தனர். மேலும் மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் உத்தரவின் பெயரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. தொடர்ந்து சுரேஷ்குமாரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து தொழில்நுட்ப உதவியுடன் சுரேஷ்குமார் இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் கடந்த மாதம் பிப்ரவரி 21-ம் தேதி துபாய் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய சுபாஷிடம் நாகை மாவட்டம் செம்பரை கடை தெருவை சேர்ந்த அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளரான ரஹினா பேகம் என்பவருக்கு சொந்தமான 900 கிராம் தங்க நகையை கொடுத்து விட்டதாகவும், அதனை கொடுக்காமல் சுபாஷ் தலை மறைவானதாக கூறப்படுகிறது.

இந்த நகை குறித்து உரிய தகவல்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த ரஹீனா பேகம் தனது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் மேல விசரம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை செயலாளர் சல்மான் என்பவர் உதவியுடன் சுபாஷ் வீட்டிலிருந்து அவருடைய சகோதரர் சுரேஷ்குமாரை கடத்தி சென்றது தெரிய வந்தது. துபாயிலிருந்து அந்த நகையை யார் கொடுத்து அனுப்பினார்கள். சுபாஷிற்கும், ரஹினா பேகத்திற்கும் எப்படி பழக்கம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து சல்மான் மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய கும்பகோணத்தை சேர்ந்த முருகன் (51), சித்திரை வேல்(46), தினேஷ்(35), ராஜா(50), கும்பகோணம் மாத்தி பகுதியை சேர்ந்த மாணிக்கவாசகம் (33), நாகையை சேர்ந்த அபுல் ஹசன் (33), மன்சூர் அலி (32) ஆகிய 8 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரஹினா பேகத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கடத்தல் வழக்கில் எட்டு பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டதால் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கோர்ட்டு முன்பு சாலையில் குவிந்ததால் நேற்று நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget