மேலும் அறிய

தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்

18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைக்கும், 21 வயதுக்கு குறைவான ஆண் குழந்தைக்கும் திருமணம் நடத்துவது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 2006-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்

தஞ்சாவூர்: குழந்தை திருமணம் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ரேவதி அறிவுறுத்தி உள்ளார்.

குழந்தை திருமணம் என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதுகுறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைக்கும், 21 வயதுக்கு குறைவான ஆண் குழந்தைக்கும் திருமணம் நடத்துவது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 2006-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி, உடல்நலம், மனநலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் இந்த சமூகக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் நடைபெற இருப்பது தெரிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

தகவல் தெரிவிக்க வேண்டிய அவசர எண்கள்:
குழந்தைகள் உதவி எண் – 1098
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் – 94441 79000
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 94981 54500
அருகிலுள்ள காவல் நிலையம்

இந்த எண்கள் மூலம் தகவல் கிடைத்தவுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக நலத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்

குழந்தை திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல; அது ஒரு குழந்தையின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல். குறைந்த வயதில் திருமணம் செய்யப்படுவதால், பெரும்பாலான பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயநிறைவு ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

மேலும், இளம் வயதிலேயே கர்ப்பம் தரிப்பதால் தாய்மார்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. குறைப்பிரசவம், ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைபாடு, தாய் மற்றும் குழந்தை உயிரிழப்பு அபாயம் போன்றவை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதோடு, மனஅழுத்தம், குடும்ப வன்முறை, பொருளாதார சிரமம், சமூக தனிமை போன்ற பிரச்சினைகளும் குழந்தை திருமணத்தின் விளைவாக உருவாகின்றன. குழந்தைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு மற்றும் பாதுகாப்பான வளர்ச்சி போன்ற உரிமைகள் பறிக்கப்படுவதால், அவர்களின் எதிர்கால வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சட்டப்படி என்ன தண்டனை?

குழந்தை திருமணத்தை ஏற்பாடு செய்வோர், நடத்தி வைப்போர், அதற்கு உடந்தையாக இருப்போர் மற்றும் திருமணத்தை ஊக்குவிப்போர் அனைவரும் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம். குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். எனவே, இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

குழந்தை திருமணத்தை தடுப்பதில் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தை திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக 1098 உதவி எண்ணிற்கோ அல்லது மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிப்பதன் மூலம் ஒரு குழந்தையின் கல்வி, உடல்நலம் மற்றும் எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்க முடியும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
அரசியல் தலையீடு... கலெக்டரிடம் புகார் மனு அளித்த பேராவூரணி வியாபாரிகள்: பின்னணி என்ன?
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்
காளி வீதியுலா கோலாகலம்: தஞ்சை கரந்தையில் திரண்ட திரளான பக்தர்கள்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget