மேலும் அறிய

தஞ்சாவூர் : உரிய அனுமதி பெறாமல் விற்பனை : 2 ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல். 7 பேர் கைது..!

வெளிமாவட்டங்களிலிருந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்கு உரிய அனுமதியின்றி 7 லாரிகளில் வந்த 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்

இந்த ஆண்டு திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்து நெல்மணிகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காத காரணத்தினாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி இருப்பதன் காரணத்தினால், நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருந்தது. உடனடியாக அனைத்து இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
 
இந்நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு விற்பனைக்காக உரிய அனுமதியின்றி 7 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  வெளிமாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் லாரிகளில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து, கொள்முதல் நிலைய பணியாளர்கள் துணையுடன் நெல்லை விற்பனை செய்வதால் உள்ளூரில் உள்ள விவசாயிகள் நெல்லை உரிய நேரத்தில் விற்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். 

தஞ்சாவூர் : உரிய அனுமதி பெறாமல் விற்பனை : 2 ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல். 7 பேர் கைது..!
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளி மாவட்ட வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வது தெரியவந்தால், கொள்முதல் நிலைய பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் வெளிமாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு, வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை கண்காணித்து தடுக்கும் வகையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையின் டிஎஸ்பி நல்லு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோட்டைச்சாமி, சிவசுப்பிரமணியன், மணிவண்ணன், கோபி, உதவி ஆய்வாளர்கள் சங்கீதா, முருகானந்தம், விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் தஞ்சாவூர் மாவட்ட எல்லைகளில் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று வரை கண்காணித்தனர். அப்போது சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த 7 லாரிகளை மடக்கி விசாரித்தனர்.
 
விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரிகளில் இருந்த 120 டன் எடையுள்ள 2 ஆயிரம் மூட்டை நெல்களையும், லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த வினித்(23), மன்னார்குடியை சேர்ந்த சுதாகரன்(26), சேலம் மாவட்டம் தார்வாய் சுப்பரமணியன்(53), முரசுப்பட்டி சபாரெத்தினம்(35), அரியலுார் மாவட்டம் கீழபழூரை சேர்ந்த ராஜூவ்காந்தி(27), திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38), தர்மபுரி மாவட்டம் இந்தூரை சேர்ந்த ஆயப்பன்(31) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

தஞ்சாவூர் : உரிய அனுமதி பெறாமல் விற்பனை : 2 ஆயிரம் மூட்டை நெல் பறிமுதல். 7 பேர் கைது..!
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், 2 ஆயிரம் நெல் மூட்டைகளையும், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்த்துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, பிடிபட்டவர்களிடம் நெல் மூட்டைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யவா? அல்லது தனியார் அரவை மில்லில் விற்பனை செய்யவா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
தஞ்சாவூரில் வெப்பம் தீவிரம்... மேகமூட்டம் நீடித்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
பாசன வாய்க்கால் கரையில் குவியும் குப்பைகள்... தஞ்சாவூர் அருகே தொற்றுநோய் அபாயம்!
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
தஞ்சை மாவட்டத்தில் நிர்வாக அதிரடி! 7 தாசில்தார்களுக்கு பணியிட மாற்றம்... கலெக்டர் ரேவதி உத்தரவு
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
Embed widget