மேலும் அறிய

தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல் - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

’’முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்பல்’’

தஞ்சாவூரில் இந்து முன்னணியினருக்கும் இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினருக்கும் இடையே ஏற்பட இருந்த கைகலப்பு மற்றும் நேரடி மோதல் காவல்துறையினரின் தலையீட்டு தடுத்தாதால் தவிர்க்கப்பட்டது.

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் தங்கம் வைப்பு திட்டத்தில் வைத்து வருமானம் ஈட்டும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் திட்டத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி லக்கிம்பூர் கேரியில் படுகொலையான விவசாயிகளின் அஸ்தி கலயம் கடந்த 23 ஆம் தேதி சென்னை அடையாறு காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இன்று காலை தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடி வந்தடைந்தது.


தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல் - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

அகில இந்திய விவசாய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் புதுக்குடியில் அஸ்தி பயணத்திற்கு வரவேற்பளித்து, 11.30 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10.30 முதல் ஐக்கிய விவசாய முன்னணியினர் அப்பகுதியில் கூடத் தொடங்கினர்.  அஸ்தி கலயம் தாங்கிய வாகனம் அங்கே வந்தடைந்ததை தொடர்ந்து, அதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் அங்கே கூடி காத்திருந்தனர். அப்போது, இந்து முன்னணி சார்பில் அங்கே நடைபெற்று கொண்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி  முடிவடையாததால் ஆத்திரமடைந்த  சிலர் இந்து முன்னணியினரை நோக்கி விரைந்தனர். இந்து முன்னணியினரும் வேட்டியை மடித்துக் கொண்டு கையில் கம்புகளை ஏந்தி எதிர்க்க தயாராகினர். இருதரப்பினரும் தாக்கி கொள்ள தயாராக நின்றனர். இதனால் அப்பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.


தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல் - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

இந்து முன்னணியினர் வேண்டுமென்றே தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக  நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி அதற்கு அனுமதியளித்த போலீஸாரை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கே பாதுகாப்பு பணியிலிருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் துரிதமாக செயல்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே புகுந்து மிகவும் கஷ்டத்துடன் முயன்று இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து, லக்கிம்பூரில் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு  இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதுவும் ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கும் போலீஸார் அனுமதி அளித்ததே இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு காரணம் என இடதுசாரி இயக்கத்தை  சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை போலீஸார் மறுத்தனர். உண்மையில், பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்தான் காரணம் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த சம்பந்தப்பட்ட உள்ளுர் காவல் நிலையத்தில் மனு அளித்து, உரிய அனுமதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 10.30 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் எந்தவொரு அமைப்புக்கும் எத்தனை மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முடிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக போலீஸார் உத்தரவு வழங்குவதில்லை. இந்நிலையில், 11.30 மணிக்கு வந்த அஸ்தி கலய அஞ்சலி நிகழ்ச்சிக்கு இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் காலை 10.30 மணி முதல் அங்கே வரத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே உரிய அனுமதியுடன் நடைபெற்று கொண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முடிக்கச் சொல்லுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், அஸ்தி கலயத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் உள்ளுர் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை. இதுபற்றி கேட்டால், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டதாக சொல்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்? உள்ளுரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு கொடுத்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆவது மனு கொடுத்திருக்க வேண்டும். முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்புகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget