மேலும் அறிய

தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல் - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

’’முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்பல்’’

தஞ்சாவூரில் இந்து முன்னணியினருக்கும் இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினருக்கும் இடையே ஏற்பட இருந்த கைகலப்பு மற்றும் நேரடி மோதல் காவல்துறையினரின் தலையீட்டு தடுத்தாதால் தவிர்க்கப்பட்டது.

கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வங்கிகளில் தங்கம் வைப்பு திட்டத்தில் வைத்து வருமானம் ஈட்டும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் திட்டத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் தஞ்சை ரயிலடியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி லக்கிம்பூர் கேரியில் படுகொலையான விவசாயிகளின் அஸ்தி கலயம் கடந்த 23 ஆம் தேதி சென்னை அடையாறு காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சி வழியாக இன்று காலை தஞ்சை மாவட்ட எல்லையான புதுக்குடி வந்தடைந்தது.


தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல்  - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

அகில இந்திய விவசாய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் புதுக்குடியில் அஸ்தி பயணத்திற்கு வரவேற்பளித்து, 11.30 மணியளவில் தஞ்சாவூர் ரயிலடிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10.30 முதல் ஐக்கிய விவசாய முன்னணியினர் அப்பகுதியில் கூடத் தொடங்கினர்.  அஸ்தி கலயம் தாங்கிய வாகனம் அங்கே வந்தடைந்ததை தொடர்ந்து, அதற்கு அஞ்சலி செலுத்துவதற்காக இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள், விவசாயிகள் அங்கே கூடி காத்திருந்தனர். அப்போது, இந்து முன்னணி சார்பில் அங்கே நடைபெற்று கொண்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி  முடிவடையாததால் ஆத்திரமடைந்த  சிலர் இந்து முன்னணியினரை நோக்கி விரைந்தனர். இந்து முன்னணியினரும் வேட்டியை மடித்துக் கொண்டு கையில் கம்புகளை ஏந்தி எதிர்க்க தயாராகினர். இருதரப்பினரும் தாக்கி கொள்ள தயாராக நின்றனர். இதனால் அப்பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு, மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு பதற்ற நிலை உருவானது.


தஞ்சாவூரில் இந்து முன்னணி – இடதுசாரிகள் மோதல்  - போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் தவிர்ப்பு

இந்து முன்னணியினர் வேண்டுமென்றே தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தைவிட அதிக  நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டி அதற்கு அனுமதியளித்த போலீஸாரை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கே பாதுகாப்பு பணியிலிருந்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் துரிதமாக செயல்பட்டு, இருதரப்பினருக்கும் இடையே புகுந்து மிகவும் கஷ்டத்துடன் முயன்று இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்து முன்னணியினர் தங்களது ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து, லக்கிம்பூரில் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு  இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி, சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ஒரே நாளில் அதுவும் ஒரே இடத்தில் இரு தரப்பினருக்கும் போலீஸார் அனுமதி அளித்ததே இதுபோன்ற பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு காரணம் என இடதுசாரி இயக்கத்தை  சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டை போலீஸார் மறுத்தனர். உண்மையில், பதற்றமான சூழ்நிலை உருவானதற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்தான் காரணம் என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்த சம்பந்தப்பட்ட உள்ளுர் காவல் நிலையத்தில் மனு அளித்து, உரிய அனுமதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு 10.30 முதல் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் எந்தவொரு அமைப்புக்கும் எத்தனை மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முடிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக போலீஸார் உத்தரவு வழங்குவதில்லை. இந்நிலையில், 11.30 மணிக்கு வந்த அஸ்தி கலய அஞ்சலி நிகழ்ச்சிக்கு இடதுசாரிகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் காலை 10.30 மணி முதல் அங்கே வரத் தொடங்கிவிட்டனர். ஏற்கெனவே உரிய அனுமதியுடன் நடைபெற்று கொண்டிருந்த இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முடிக்கச் சொல்லுமாறு அழுத்தம் கொடுத்தனர்.

இந்நிலையில், அஸ்தி கலயத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் உள்ளுர் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்றிருக்கவில்லை. இதுபற்றி கேட்டால், சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டதாக சொல்கின்றனர். இது எந்த வகையில் நியாயம்? உள்ளுரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு கொடுத்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆவது மனு கொடுத்திருக்க வேண்டும். முறையாக அனுமதி பெறாமல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டு அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு காவல் துறையினர் மீது குற்றம் சுமத்துவது  நியாயமா என போலீசார் புலம்புகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
Southern Railway: சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
Southern Railway: சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
சரக்கு ரயில் விபத்து; மாற்றுப் பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் - முழு விவரங்கள் இதோ
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
TVK Vijay: நீங்க எதுக்கு? Sorryமா சர்காராக மாறிய திமுக அரசு - மு.க.ஸ்டாலினை விளாசித்தள்ளிய விஜய்
Compact Electric SUV: டாப் 4 பிராண்ட்கள், புதுசா 4 காம்பேக்ட் மின்சார எஸ்யுவிக்கள் - வெயிட் பண்ணா செம்ம வொர்த்து
Compact Electric SUV: டாப் 4 பிராண்ட்கள், புதுசா 4 காம்பேக்ட் மின்சார எஸ்யுவிக்கள் - வெயிட் பண்ணா செம்ம வொர்த்து
Expert on Air India Crash: வேண்டுமென்றே விழ வைக்கப்பட்டதா ஏர் இந்தியா விமானம்.? நிபுணர் சொன்ன அதிர்ச்சித் தகவல்
வேண்டுமென்றே விழ வைக்கப்பட்டதா ஏர் இந்தியா விமானம்.? நிபுணர் சொன்ன அதிர்ச்சித் தகவல்
Watch Video: ஐயாவை பாத்த மாதிரியே இருந்துச்சு.. கோலியாகவே மாறிய சுப்மன்கில்.. ஜாக் கிராவ்லிக்கு மிரட்டல்!
Watch Video: ஐயாவை பாத்த மாதிரியே இருந்துச்சு.. கோலியாகவே மாறிய சுப்மன்கில்.. ஜாக் கிராவ்லிக்கு மிரட்டல்!
Embed widget