மேலும் அறிய

கடும் பனி... பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வெகுவாக மும்முரம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம், ஆனால் நீர் இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து தேதி மாறுபடும். 2025-ல் போதுமான நீர் இருந்ததால் ஜூன் 12-ல் திறக்கப்பட்டது,

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியில் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் பணிகளில் வெகுவாக மும்முரம் காட்டி வருகின்றனர். கடும் பனியால் பயிர்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரம் தெளிப்பு பணிகளும் நடந்து வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணை திறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படுவது வழக்கம், ஆனால் நீர் இருப்பு மற்றும் தேவையைப் பொறுத்து தேதி மாறுபடும். உதாரணமாக, 2025-ல் போதுமான நீர் இருந்ததால் ஜூன் 12-ல் திறக்கப்பட்டது.


கடும் பனி... பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வெகுவாக மும்முரம்

ஆனால் சில சமயங்களில் மே மாதம் அல்லது தாமதமாகவும் திறக்கப்படும். நீர் திறக்கும் அளவு மற்றும் தேதி குறித்து தமிழக நீர்வளத் துறை அல்லது முதல்வர் அறிவிப்பார்கள். மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி அதிகம் இருக்கும். காலதாமதாமக திறக்கப்பட்டால் சம்பா, தாளடி சாகுபடி அதிகரிக்கும். இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது. அதனால் குறுவை சாகுபடி 1.98 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை நடந்து சாதனை படைத்தது.

இதையடுத்து சம்பா, தாளடி 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு கூடுதலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த தொடர்மழையால் சாகுபடி பரப்பளவு எதிர்பார்த்ததை விட குறைந்தது. தற்போது ஆங்காங்கே சம்பா அறுவடை பணிகள் நடந்து வருகிறது. பல இடங்களில் சம்பா நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராகி வருகிறது.

குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது தாளடி சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். இந்த கதிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயப்பணிகளில் முடக்கம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததாலும், கடும் பனியினாலும் தாளடி சாகுபடி பயிர்களில் ஆங்காங்கே பூச்சி தாக்குதல் தென்பட்டது. தற்போது மழை பெய்யாத நிலையில் வயல்களில் களைகள் அதிகளவில் மண்டின. இதையடுத்து களைகளை அகற்றும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.  

இந்நிலையில் காலை 9 மணியளவிலும் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் அருமலைக்கோட்டை பகுதியில் விவசாயிகள் தாளடி பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பான் மூலம் அடித்து வருகின்றனர். இன்னும் 4 வாரத்தில் அறுவடைப்பணிகள் ஆரம்பித்து விடும் என்பதால் விவசாயப்பணிகள் வெகுவாக சுறுசுறுப்படைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கையில், விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்படும் என்பதால் பூச்சி மருந்து அடிக்கும் பணிகளை ஈடுபட்டுள்ளோம். மாலை வேளையில் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடாது என்பதால் காலை வேளையில் முடிக்க வேண்டும் என்று செய்து கொண்டிருக்கிறோம். மேலும் பயிர்கள் நன்கு செழித்து வளர பல பகுதிகளில் களைப்பறித்தல் மற்றும் உரம் தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
RCB Abhinandan Singh: மங்கேஷ் யாதவிற்கு பதிலாக அபினந்தன்சிங்! ஆர்சிபி அணி இவரை களமிறக்கியது ஏன்?
Embed widget