மேலும் அறிய

”திருவாரூரில் கொட்டித் தீர்த்த மழை” 3 மணி நேரத்தில் 10.செ.மீ பதிவு..!

”இன்று திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது”

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில் 10 செண்டி மீட்டர் மழை பொழித்து அனைவரையும் வீடுகளுக்குள் முடங்க வைத்துள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியிருப்பதால், இன்னும் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
மூன்று மணி நேரத்தில் இவ்வளவு மழையா ?
 
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இன்று தெற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ள்  நிலையிலும் மேலும்  இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15,16 தேதிகளில் புதுவை வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளும் என்பதாலும் அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் குறிப்பாக இன்று விழுப்புரம் கடலூர் அரியலூர் பெரம்பலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் நேற்று இரவு முதல் மேகமூட்டமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நாலுகால்மண்டபம் வாழ வாய்க்கால் சீனிவாசபுரம் வடக்கு வீதி உள்ளிட்ட இடங்களிலும் மேலும் சேந்தமங்கலம் விளமல் வண்டாம்பாலை நன்னிலம் குடவாசல் எட்டியலூர் திருநெல்லிக்காவல் உள்ளிட்ட இடங்களிலும் நள்ளிரவு இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
 
10 செண்டி மீட்டர் மழை
 
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை திருவாரூர் மாவட்டத்தில் 10 செ.மீ  மழை அளவும் பதிவாயிருக்கிறது.குறிப்பாக திருவாரூரில் 3.செ.மீ மழை அளவும் நன்னிலம் குடவாசலில் 2 செ.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் மழை இல்லாத நிலையில் தற்போது  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.
 
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
 
அதிக மழை பொழியும் நேரத்தில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும் முன்னேற்பாடான விஷயங்களை முன்கூட்டியே செய்துவைத்துக்கொள்ளும்படியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக மழை மற்றும் காற்று வீசும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்பதால் அதற்கு ஏற்றவாறு வீட்டில் ஏற்பாடுகளை செய்துக்கொள்ள வேண்டும் என்றும் மழை தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
மிக அதி கன மழை எச்சரிக்கை
 
இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதி கன மழை பெய்யும் என தமிழ்நாடு அரசின் பொதுத்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் இந்த கன மழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Embed widget