மேலும் அறிய

எட்டு வழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்.. அமைச்சர் எ.வ வேலு

நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துப்போகும் மனநிலையில்தான் இருக்கிறோம்.

எட்டு வழி சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் அமைச்சர் எ.வ வேலு திருவாரூரில் பேட்டி.

திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு என்ற இடத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் 1295 கிலோ மீட்டர் தூரம் சாலைகளை விரிவுபடுத்துவது,மேம்படுத்துவது செப்பனிடுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் ஏழு புறவழிச் சாலைகள் அமைக்க பணிகள் திட்டமிடப்பட்டு அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புறவழிச் சாலை பணிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. தற்பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின்  புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முதல் கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

எட்டு வழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்.. அமைச்சர் எ.வ வேலு
தமிழகத்தில் கிராமப்புற பகுதிகள் அதிகம் உள்ளன.குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கிராமப்புறங்கள் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு. திருவா௹ர் மாவட்டத்தில் 10,000 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நபார்டு வங்கியின் மூலமாக 59.94 கோடி நிதி பெறப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் 19 பாலங்கள் மற்றும் கிராமப்புற சாலைகள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது 14 பாலப் பணிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 5 பாலப் பணிகளும் இந்த நிதியாண்டிற்குள் முடிக்கப்படும். மத்திய அரசுக்கு மாநில அரசு இணக்கமான முறையில் தான் இருக்கிறது.மத்திய அரசு சொல்லக்கூடிய அனைத்து பணிகளையும் மாநில அரசு சிறப்பாக செய்து வருகிறது.11 ஆண்டு காலமாக கிடப்பில் இருந்த சாலை பணிகளை கடந்த 8 மாதங்களில் நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம் ஆகவே நாங்கள் மத்திய அரசுடன் ஒத்துப்போகும் மனநிலையில் தான் இருக்கிறோம்

எட்டு வழி சாலை பணிகள் தொடங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும். 

எட்டு வழிச்சாலை தொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும்.. அமைச்சர் எ.வ வேலு

மத்திய அரசு முடிவு எடுத்து தமிழக முதல்வரிடம் தெரிவிப்பார்கள் தமிழக அரசு இதில் கொள்கை முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது எட்டு வழி சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி இல்லை. ஆகவே இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவு எடுப்பார் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget