மேலும் அறிய

மாதிரி பள்ளித் திட்டத்தால் என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்கின்றனர் - அமைச்சர் அன்பில்மகேஷ் பெருமிதம்

அரசு பள்ளி மாணவர்கள் முன் மாதிரி கல்வித் திட்டம் வாயிலாக விழிப்புணர்வு பெற்று முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்: அரசு பள்ளி மாணவர்கள் முன் மாதிரி கல்வித் திட்டம் வாயிலாக விழிப்புணர்வு பெற்று ஏராளமானோர் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு லேப்டாப்:

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் அரசு பள்ளி மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (NIFTEM-T) தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களை சேர்ந்த 13 மாணவர்கள் பயில்கின்றனர். அம்மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக லேப்டாப்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தொடர்ந்து அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


மாதிரி பள்ளித் திட்டத்தால் என்.ஐ.டி., ஐ.ஐ.டி.யில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்கின்றனர் - அமைச்சர் அன்பில்மகேஷ் பெருமிதம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு:

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது, இந்த முதன்மைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 13 பேர் சேர்ந்துள்ளனர். எந்தெந்த நிறுவனத்தில் என்னென்ன படிப்புகள் உள்ளன? எதைப் படித்தால் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேரலாம் என்கிற விழிப்புணர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாதிரி பள்ளித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த பல மாணவர்கள் என்.ஐ.டி., ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முதன்மைக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு லேப்டாப்களை வழங்கி வருகிறோம்.

வெளிநாட்டு கல்வி உதவித்தொகை:

மேலும், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலுள்ள முதன்மைக் கல்வி நிறுவனங்களிலும் தமிழக அரசு பள்ளி மாணவர்க சேர்ந்து படிக்கின்றனர். வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை மூலம் தைவான் நாட்டில் தமிழக அரசு பள்ளியைச் சார்ந்த 2 மாணவர்கள் படிக்கவுள்ளனர்

இத்திட்டத்தை இன்னும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லவும், இதுபோன்ற விழிப்புணர்வை அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதிநிலை சரியான பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். கடந்த கால ஆட்சியில் 1.25 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படாமல் விட்டுச் சென்றனர். பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலும், 6 ஆயிரத்து 218 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிதொழில்நுட்ப ஆய்வகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிநவீன மென்பொருள்கள் உள்பட முழுமையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு மாதிரி பள்ளிகளின் உறுப்பினர்- செயலர் இரா. சுதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சு.க. முத்துசெல்வம், முதன்மை கல்வி அலுவலர் இரா. மதன்குமார் மற்றும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
Embed widget