மேலும் அறிய

Gaja Cyclone Recovery: ‛கஜா’ பிடுங்கி எறிந்த மரங்கள்... மீண்டும் துளிர்க்க வைக்கும் முயற்சி!

வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர்.

கஜா புயலால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்ததால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறியது கண்டு மீண்டும் சோலைவனமாக மாற்ற, நாட்டு மரக்கன்றுகளை நடும் முயற்சியில் வனம் தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு, இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளது. திருவாரூரில் வனம் தன்னார்வ அமைப்பு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இதன் ஒருங்கிணைப்பாளராக கலைமணி செயல்பட்டு வருகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மரக்கன்றுகளை 15 ஆண்டுகளாக நட்டு வருகிறார். இவருடன் பள்ளி கல்லூரி மாணவர்கள், இதர தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக கலைமணி தெரிவிக்கிறார்.

Gaja Cyclone Recovery: ‛கஜா’ பிடுங்கி எறிந்த மரங்கள்... மீண்டும் துளிர்க்க வைக்கும் முயற்சி!
இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அடித்த கஜா புயல் தாக்கியதில் டெல்டா மாவட்டங்கள் ஆகிய திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சி அளித்தது. இதனைக் கண்டு வேதனையடைந்த பல்வேறு அமைப்புகள் மனம் தளராமல் மரம் நடும் தங்களது பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். வனம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பணியை தொடங்கினர். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதலில் மரக்கன்றுகளை முழுமையாக நட வேண்டும், மேலும் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற எண்ணத்தில் நான்கு மாவட்டங்களிலும் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டு வந்தனர். திருவாரூர் அருகே குளிக்கரை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வனம் தன்னார்வ அமைப்புடன் இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இதர தன்னார்வ அமைப்புகள் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டனர்.

Gaja Cyclone Recovery: ‛கஜா’ பிடுங்கி எறிந்த மரங்கள்... மீண்டும் துளிர்க்க வைக்கும் முயற்சி!
குறிப்பாக வெளிநாட்டு மரங்களை அப்புறப்படுத்தி நாட்டு மரங்களாகிய அத்திமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், மற்ற நாட்டு மரங்களை முழுமையாக நட்டு வருகின்றனர். பாலைவனமாக இருந்த இந்த டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றுவதே எங்கள் எண்ணம் என தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் நடப்பட்டுள்ளன. குறிப்பாக இயற்கை பேரிடர்களை தாங்கும் மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்திருப்பதாகவும் மேலும் பல இடங்களில் குறுங்காடுகள் அமைத்து பாலைவனமாக மாறிய டெல்டா மாவட்டங்களை சோலைவனமாக மாற்றியுள்ளனர் வனம் தன்னார்வ அமைப்பினர்.
இயற்கை தந்ததை இயற்கையாய் வந்த கஜா புயல் பிடுங்கி எறிந்த நிலையில், அதை மீண்டும் இயற்கையாய் மீட்டெடுக்கும் முயற்சி வெற்றி அடையட்டும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget