மேலும் அறிய

மயிலாடுதுறை: தடைக்கு பின்பு மீண்ட வாழ்வு : அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி..!

தடைக்காலத்திற்கு பின்னர் அதிகளவு மீன்கள் கிடைத்ததால் நல்ல வருவாய் கிடைக்கும் என மீனவர்கள் மகிழ்ச்சியடைத்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரு மாத காலத்துக்கு மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதற்கு அரசால் தடை விதிக்கப்படும். அந்தவகையில், இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 15-ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் செயல்படுத்தப்பட்டது.


மயிலாடுதுறை: தடைக்கு பின்பு மீண்ட வாழ்வு : அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி..!

இந்தத் தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள சுமார் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள பல ஆயிரம்  விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாது. தமிழகத்தின் வட மாவட்டமான திருவள்ளூர் முதல், தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழ்நாடு அரசால் இத்தடைக் காலம் செயல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன் பிடிப்பவர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம், 1983, பிரிவு 5-ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். எனினும், கட்டுமரப் படகுகள், ஃபைபர் படகுகள், மோட்டார் அல்லாத படகுகள், நாட்டுப் படகுகள் 3,4 கடல் நாட்டிக்கல் மைலுக்குத்தான் செல்ல முடியும் என்பதால், அந்தப் படகுகள் மூலம் மீன் பிடிக்க இக்காலத்தில் தடை ஏதும் இல்லை.


மயிலாடுதுறை: தடைக்கு பின்பு மீண்ட வாழ்வு : அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி..!

இந்தத் தடைக் காலத்தில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள சுமார் 1 லட்சத்தி 20 ஆயிரம் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசால் 5,000 ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிறது. இந்தத் தடைக் காலத்தில் வலைகளைச் சரிசெய்தல், படகுகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளில் மீனவர்கள் ஈடுபடுவர். மேலும் இந்தத் தடைக் காலத்தால் கரையோரம் படகுகள் மட்டுமே மீன்பிடிப்பதால் குறைவான அளவில் கிடைக்கும் என்பதால் மீன்களின் விலையும் உயர்ந்திருக்கும்.


மயிலாடுதுறை: தடைக்கு பின்பு மீண்ட வாழ்வு : அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி..!

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 61 நாட்கள் கழித்து கடந்த 15-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மடவாமேடு மீனவ கிராமத்தில் ஃபைபர் படகு மூலம் கடலுக்கு சென்றனர். மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் வலையில் அதிக அளவில் மத்தி, சூரை, சீடி வகை மீன்கள் கிடைத்துள்ளது. இவ்வகை  மீன்கள் அதிகளவு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ மத்திமீன் 130 ரூபாய் சூரை 200 ரூபாய், சீடி 120 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். மேலும் மீன்கள் பெருமளவு கேரளாவில் உணவிற்காகவும், மீன் எண்ணெய் தயார் செய்யவும் பயன்படுகின்றன. 


மயிலாடுதுறை: தடைக்கு பின்பு மீண்ட வாழ்வு : அதிகளவு மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி..!

அதிக அளவிலான மத்தி,சூரை உள்ளிட்ட மீன்கள் இப்பகுதிகள் பிடிபடுவதையடுத்து, டன் கணக்கில் பிளாஸ்டிக் பெட்டிகளில் முறையான ஐஸ் பேக்கிங் செய்து, கண்டெய்னர் லாரிகள் மூலம் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதனால் அதிக லாபம் கிடைப்பதாக இப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget