மேலும் அறிய

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

சீர்காழி  அருகே மடவாமேடு பகுதியில் மீன்பிடித்த போது நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்ததை அடுத்து தடை காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னலை சந்தித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீன்பிடிப்பில்  ஈடுபட்டனர். ஆனால் மீன் பிடி தடை காலம் முடிந்த பின்னர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை இதனால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் விஜய்.  இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் மடவாமேடு கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் நாராயணமூர்த்தி என்பவர் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து  நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு அதே படகில் ஏற்றி அவசர அவசரமாக மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

இதனையடுத்து தகவலறிந்த கடலோர காவல்துறை காவலர்கள் மடவாமேடு கடல்கரைக்கு விரைந்து வந்து நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர் நாராயண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடவாமேடு மீனவ கிராமம் மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

புயல்,வெள்ளம்,மழை என இயற்கை சீற்றம் எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் ஆகவே இருக்கின்றன. ஆண்டில் பாதி நாட்கள் புயல் வெள்ளம் மழை என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அரசு விதிக்கும் மீன்பிடி தடை காலம் காரணமாக இரண்டு மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் மீனவர்களுக்கு, இயற்கை சாதகமாக உள்ள காலகட்டத்தில் மட்டுமே தங்கள் உயிரை துச்சமென நினைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படகில் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம் போன்ற எதிர்பாராத காரணங்களால் படகுகள் விபத்துக்குள்ளாகும் படகிலிருந்து நிலைதடுமாறி மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதுபோன்று உயிரிழப்பு ஏற்படும் மீனவரின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget