மேலும் அறிய

மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

சீர்காழி  அருகே மடவாமேடு பகுதியில் மீன்பிடித்த போது நிலை தடுமாறி கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்ததை அடுத்து தடை காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாத காலமாக கடலுக்கு செல்லாத மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னலை சந்தித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் கடலுக்கு சென்ற மீனவர்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீன்பிடிப்பில்  ஈடுபட்டனர். ஆனால் மீன் பிடி தடை காலம் முடிந்த பின்னர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் பிடிபடவில்லை இதனால் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவைச் சேர்ந்தவர் விஜய்.  இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் மடவாமேடு கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தாண்டவன்குளம் கிராமம் கருத்தான்குத்து தெருவைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் நாராயணமூர்த்தி என்பவர் நிலை தடுமாறி படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து  நாராயண மூர்த்தியை மயங்கிய நிலையில் மீட்டு அதே படகில் ஏற்றி அவசர அவசரமாக மடவாமேடு கிராமத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

இதனையடுத்து தகவலறிந்த கடலோர காவல்துறை காவலர்கள் மடவாமேடு கடல்கரைக்கு விரைந்து வந்து நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீனவர் நாராயண மூர்த்தி உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனால் மடவாமேடு மீனவ கிராமம் மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீன்பிடித்த போது கடலில் தவறி விழுந்து மீனவர் உயிழப்பு

புயல்,வெள்ளம்,மழை என இயற்கை சீற்றம் எதுவென்றாலும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள் ஆகவே இருக்கின்றன. ஆண்டில் பாதி நாட்கள் புயல் வெள்ளம் மழை என வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் அரசு விதிக்கும் மீன்பிடி தடை காலம் காரணமாக இரண்டு மாத காலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருக்கும் மீனவர்களுக்கு, இயற்கை சாதகமாக உள்ள காலகட்டத்தில் மட்டுமே தங்கள் உயிரை துச்சமென நினைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படகில் செல்லும் மீனவர்களுக்கு கடல் சீற்றம் போன்ற எதிர்பாராத காரணங்களால் படகுகள் விபத்துக்குள்ளாகும் படகிலிருந்து நிலைதடுமாறி மீனவர்கள் கடலில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதுபோன்று உயிரிழப்பு ஏற்படும் மீனவரின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget