மேலும் அறிய

தஞ்சாவூர் : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை.. காப்பாற்ற சென்ற மகனும் உயிரிழந்த சோகம்..

’’வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு’’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள அகரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரை கண்ணன் (50). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், அருண்குமார், பிரேம்குமார் என்ற மகன்களும் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரேம்குமார் பொறியியல் படித்துவிட்டு திருச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் தொழில் அப்ரண்டீசாக  வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில், அகரப்பேட்டையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் அதிகாலை வீட்டு வாசலில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது.  இதனால் தூக்கத்திலிருந்து விழித்த துரைக்கண்ணன் கதவை திறந்து கொண்டு வெளியே பார்க்க சென்றார்.


தஞ்சாவூர் : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை.. காப்பாற்ற சென்ற மகனும் உயிரிழந்த சோகம்..

அப்போது வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்து விட்டார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் துரைக்கண்ணு அலறினார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமார் வெளியே வந்த போது, மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த பிரேம்குமார்,  தனது தந்தையை காப்பாற்றுவதற்காக இழுத்தார். வீட்டின் வெளியில் தரை ஈரமாகவும், அறுந்த கிடந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தால், துரை கண்ணனும், பிரேம்குமாரும் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சோகம் 

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாமந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி என். ரமேஷ் (31). வெட்டிக்காடு பிரிவு சாலை அருகே கல்லணை கால்வாயிலிருந்து பிரியும் கிளை வாய்க்காலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து  குளிக்கச் சென்றார். அப்போது, இவர் அப்பகுதியிலுள்ள சுழலில் சிக்கினார், நீச்சல் தெரியாததால், காப்பாற்ற கோரி கூச்சலிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள், ரமேஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலத்திலிருந்து கல்லணைக் கால்வாயில் மகர்நோன்புசாவடி வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்த ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் (15) அக்டோபர் 1 ஆம் தேதி குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, இவரைக் காப்பாற்ற முயன்ற அப்பகுதியிலுள்ள பிளக்ஸ் வடிவமைப்பு நிறுவன மேலாளரான பூதலூரைச் சேர்ந்த முகிலன் (30) தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஆயிஷா பேகத்தின் சடலம் நத்தமாடிப்பட்டியில், கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து முகிலனின் உடல் தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் கீழ்க்குமிழியில் மீட்கப்பட்டது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதேபோல, மானோஜிப்பட்டியில் கல்லணை கால்வாயில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன் (22) நீரில் மூழ்கினார். இவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் மீட்கப்பட்டார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
IPL RCB Champion: ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
Virat Kohli:
Virat Kohli: "நம்பவே முடியல.. எல்லாத்தையும் கொடுத்துருக்கேன்.." கண்கலங்கிய சாம்பியன் விராட் கோலி
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
Embed widget