மேலும் அறிய

தஞ்சாவூர் : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை.. காப்பாற்ற சென்ற மகனும் உயிரிழந்த சோகம்..

’’வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு’’

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள அகரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் துரை கண்ணன் (50). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், அருண்குமார், பிரேம்குமார் என்ற மகன்களும் ஹேமா என்ற மகளும் உள்ளனர். இவர்களில் பிரேம்குமார் பொறியியல் படித்துவிட்டு திருச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் தொழில் அப்ரண்டீசாக  வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில், அகரப்பேட்டையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதற்கிடையில் அதிகாலை வீட்டு வாசலில் நாய் குரைத்துக் கொண்டிருந்தது.  இதனால் தூக்கத்திலிருந்து விழித்த துரைக்கண்ணன் கதவை திறந்து கொண்டு வெளியே பார்க்க சென்றார்.


தஞ்சாவூர் : அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தந்தை.. காப்பாற்ற சென்ற மகனும் உயிரிழந்த சோகம்..

அப்போது வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பியை, தூக்க கலக்கத்தில் துரைக்கண்ணன் மிதித்து விட்டார். அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் துரைக்கண்ணு அலறினார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பிரேம்குமார் வெளியே வந்த போது, மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்த பிரேம்குமார்,  தனது தந்தையை காப்பாற்றுவதற்காக இழுத்தார். வீட்டின் வெளியில் தரை ஈரமாகவும், அறுந்த கிடந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தால், துரை கண்ணனும், பிரேம்குமாரும் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சோகம் 

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சாமந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த டீக்கடை தொழிலாளி என். ரமேஷ் (31). வெட்டிக்காடு பிரிவு சாலை அருகே கல்லணை கால்வாயிலிருந்து பிரியும் கிளை வாய்க்காலில் தனது நண்பர்களுடன் சேர்ந்து  குளிக்கச் சென்றார். அப்போது, இவர் அப்பகுதியிலுள்ள சுழலில் சிக்கினார், நீச்சல் தெரியாததால், காப்பாற்ற கோரி கூச்சலிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தஞ்சாவூர் தீயணைப்பு வீரர்கள், ரமேஷின் உடலை மீட்டனர். இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் காந்திஜி சாலை ஆற்றுப்பாலத்திலிருந்து கல்லணைக் கால்வாயில் மகர்நோன்புசாவடி வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்த ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் (15) அக்டோபர் 1 ஆம் தேதி குதித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது, இவரைக் காப்பாற்ற முயன்ற அப்பகுதியிலுள்ள பிளக்ஸ் வடிவமைப்பு நிறுவன மேலாளரான பூதலூரைச் சேர்ந்த முகிலன் (30) தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். ஆயிஷா பேகத்தின் சடலம் நத்தமாடிப்பட்டியில், கரை ஒதுங்கியது. இதைத்தொடர்ந்து முகிலனின் உடல் தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் கல்லணைக் கால்வாயில் கீழ்க்குமிழியில் மீட்கப்பட்டது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டனர். இதேபோல, மானோஜிப்பட்டியில் கல்லணை கால்வாயில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் விக்னேஷ்வரன் (22) நீரில் மூழ்கினார். இவரை தீயணைப்பு வீரர்கள் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் மீட்கப்பட்டார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? இப்போதும் கூட விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? இப்போதும் கூட விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Embed widget