மேலும் அறிய

கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்: எங்கு? எதற்கு தெரியுங்களா?

கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் இறந்ததற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மட்டும் வழங்கியதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர். 

தஞ்சாவூர்: கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர் கூட்டத்திலிருந்து கருப்பு பேட்ச் அணிந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியபோது தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமையில் 50க்கும் அதிகமான விவசாயிகள், கரூர் சம்பவத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் தமிழக அரசு, கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 விவசாயிகள் இறந்ததற்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் மட்டும் வழங்கியதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்தனர். 


கருப்பு பேட்ஜ் அணிந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்: எங்கு? எதற்கு தெரியுங்களா?

பின்னர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கியது போதாது. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எவ்வித நிபந்தனையும் இன்றி மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

இதேபோல் கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணானதால் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். அறுவடை செய்த நெல் மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் முறையாக கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் சுகுமாரன் தலைமையில் மழையில் நனைந்து முளைத்த நெல்லை இருமுடி போல் கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டங்களால் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget