மேலும் அறிய

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சையில் நூதனப் போராட்டம்

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.

மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது அணை கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். ராசியின் மணல் அணை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், போராட்டக் குழு நிர்வாகிகள் பிஅய்யாக்கண்ணு, நாமக்கல் பாலசுப்பிரமணியன், சிவகங்கை எல்.ஆதிமூலம், பயரி எஸ். கிருஷ்ணமணி, சீர்காழி சீனிவாசன், பாலு தீட்சதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் தஞ்சையில் நூதனப் போராட்டம்

ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டம்

தொடர்ந்து ஊர்வலமாக காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் ஊர்வலமாக சாந்த பிள்ளை கேட் அருகில் உள்ள காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தின், போது விவசாயி ஒருவரை இறந்தவர் போல் துாக்கிக் கொண்டு சென்ற மற்ற விவசாயிகள், முற்றுகைப் போராட்டம் நடந்த இடத்தில் படுக்க வைத்து, அவர் இறந்தது போல் பாவித்து ஒப்பாரி வைத்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

மேகதாதுவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் வாக்குறுதி

பின்னர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட இருப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்து வருகின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எந்த நேரமும் மோடி அரசு அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் ஆணையத்தில் முறையிடவும், அதனை எதிர்ப்பதற்கும் முதல்வர் ஸ்டாலின் அரசு தவறிவிட்டது.  

முதல்வர் ஸ்டாலின் மௌனம் காக்கிறார்

இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணை விவகாரத்தில் வாய் திறக்காமல் மெளனம் காத்து வருகிறார். கர்நாடக அரசுக்கு தமிழக அரசு துணை போவதாக தமிழக விவசாயிகள் கருதும் நிலை உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை இதுவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. 
 
இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் கோடை வாசலில் ஓய்வெடுக்கலாம். எங்கள் நிலம் கருகுவதைப் பார்த்து நாங்கள் வீதியில் அழுதுக்கொண்டு இருக்கிறோம். இதுவரையில் முதல்வர் ஸ்டாலின் வாய் திறந்து ஆறுதல் சொல்லக்கூட வரவில்லை இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget