மேலும் அறிய

திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி, கல்லூரி அமைக்க முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்

திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தஞ்சாவூர்: திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க முயற்சிகள் நடந்து வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருச்சியில் 1000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார். அப்போது அவர் கூறியதுதான் ஹைலைட்... திமுக ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி அமைக்க முயற்சிகள் நடக்கிறது என்றவுடன் கைதட்டல்கள் அதிகரித்தன.

திருச்சி உறையூரில் உள்ள மெத்தடீஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் அன்பழகன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாகவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கவும், உயர்கல்விக்கு ஊக்கமளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலைஞர் அதைத் தொடரச் செய்தார். தற்போதைய ஆட்சியிலும் அது தொடர்வதாகவும் அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளிகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி சார்பில் 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடம் தற்போது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுவதாகவும், அங்கு மேல்நிலைப்பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார. விரைவில் திருச்சி மேற்கு தொகுதியில் அரசு பள்ளி மற்றும் அரசு கல்லூரி கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கலைஞர் ஆட்சிக் காலத்திலும் சரி, தற்போதும் சரி திருச்சி மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக திமுக அரசு உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், மிதிவண்டியில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் விடாது பொழியும் மழை, நிவாரணம் அறிவித்த அரசு, ஐபிஎல் ஏலம் - 11 மணி வரை இன்று
Embed widget