மேலும் அறிய

தஞ்சையில் முதன்முறையாக வரும் 11ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட கலெக்டர் தகவல்

தஞ்சை நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவது குறித்து பலமுறை கலெக்டர் கவனத்திற்கு பொதுமக்கள் புகார்கள் கொண்டு சென்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலையில் உள்ள விலங்குகள் வதை தடுப்பு சங்க அலுவலக வளாகத்தில் (எஸ்.பி.சி.ஏ) மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் தலைமை வகித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சையில் வரும் 11-ந் தேதி நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாய்களுக்கு விலையின்றி வெறிநோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய நாய் வகைகளை பராமரித்து அவற்றின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும். நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும், எஸ்.பி.சி.ஏ பணிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. எஸ்.பி.சி.ஏ.வில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

சுகாதாரமான முறையில் ஒரு ஆபரேஷன் தியேட்டரில் வைத்து இந்த பணி நடக்கிறது . கருத்தடை முடிந்து 3 நாட்களுக்கு நாய்களுக்கு தேவையான உணவு கொடுத்து பராமரித்த பின்னரே அவற்றை வெளியில் விடுகிறோம். எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தஞ்சையில் முதன்முறையாக வரும் 11ம் தேதி நாய்கள் கண்காட்சி - மாவட்ட கலெக்டர் தகவல்

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனை கல்லூரி டீன் நர்மதா, தாசில்தார் சக்திவேல், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவர் சத்யராஜ், டாக்டர் ராதிகா மைக்கேல், பேராசிரியர் சுகுமார், லயன்ஸ் கிளப் முகமது ரபிக், பொறியாளர் முத்துக்குமார், எஸ்.பி.சி.ஏ உறுப்பினர் சதீஷ், தஞ்சை ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை நகரில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிவது குறித்து பலமுறை கலெக்டர் கவனத்திற்கு பொதுமக்கள் புகார்கள் கொண்டு சென்றனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சையில் நாய்கள் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தஞ்சையில் இதுபோன்று நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது முதல்முறை என்பதால் அதை பார்ப்பதற்கு ஆர்வமுடன் உள்ளோம். மேலும் வீட்டில் எந்த நாய் வகைகளை வளர்க்கலாம் என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வீடுகளை பாதுகாக்க சிறந்த நாய் வகை எது என்பதும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் நாய் வளர்ப்பவர்கள் இந்த கண்காட்சி வருவார்கள் என்பதால் பல நாய்களின் வகைகள் குறித்து தெரிந்து கொள்ள இயலும்” என்று தெரிவித்தனர்.

 
 

தலைப்பு செய்திகள்

பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
பட்டுக்கோட்டையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு
தரக்கட்டுப்பாட்டு அதிகாரியின் அதிரடி: கும்பகோணத்தில் உர இருப்பு குறித்து திடீர் ஆய்வு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
Embed widget