மேலும் அறிய

Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்டு வரும் மீன்பிடித் துறைமுகத்தில் மாண்டஸ் புயல் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 -ம் ஆண்டு அதிமுக அரசால் 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்காக தரங்கம்பாடி கடலில் 1070 மீட்டர் தூரம் 15 அடி உயரம், 15 அடி அகலத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு, 90 சதவீத பணிகள் நிறைவடைந்து. கடந்த 2020 -ல் அம்பன் புயலின் போது தூண்டில் வளைவுக்காக கொட்டப்பட்டிருந்த கருங்கல் தடுப்பு சுவரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. 


Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு

அதனை தொடர்ந்து, மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 20 அடி உயரத்தில் 15 அடி அகலமுடன்  கூடுதலாக 70 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவுடன் துறைமுக பணிகள் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழலில் நேற்று கரையைக் கடந்த மாண்டஸ் புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு கடுமையாக சேதமடைந்தது. கருங்கற்களால் ஆன 20 அடி உயரம் உள்ள தடுப்பு சுவர் மீது கான்கிரிட்டிலான பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக 10 அடியில் இருந்து 15 அடி உயரம் கடலலைகள் எழும்பி தூண்டில் வளைவு தடுப்பு சுவர் மீது மோதியதால் அதில் பாதிப்பு ஏற்பட்டு தூண்டில் வளைவில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 


Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு

கருங்கர்களால் ஆன தடுப்பு சுவரில் மண் கொண்டு நிரப்பப்பட்டு மேலே கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அலை வேகத்தில் கருங்கல்லில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக சமதளத்தில் இருந்த கான்கிரீட் பாதையானது பல இடங்களில் உள்வாங்கியுள்ளது. மேல்மட்ட விளிம்பு பகுதிகள்  சேதமடைந்துள்ளது. தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவை ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மயிலாடுதுறையில் மாண்டஸ் புயல் காரணமாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கிய தன்னார்வலர்கள்.

சாலையோரத்தில் தங்கி உள்ள ஆதரவற்ற மக்கள், சாதாரண நேரங்களில் பொதுமக்கள் தரும் பணம் மற்றும் உணவுப் பொருட்களைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருவார்கள். ஆனால் புயல், கனமழை நேரங்களில் சாலைகளில் மக்கள் போக்குவரத்து இல்லாமல் இருப்பதால் இந்த ஆதரவற்ற மக்கள் உணவின்றி கடும் சிரமங்களை அடைவார்கள். இத்தகைய மக்கள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மயிலாடுதுறையில் இருந்து செயல்படும் ஜோதி பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை பேரிடர் காலங்களில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.


Cyclone Mandous: மாண்டஸ் புயலால் சேதமடைந்த தரங்கம்பாடி துறைமுக தூண்டில் வளைவு

மாண்டஸ் புயல் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியதால் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவித்தனர். அவர்களை ஜோதி அறக்கட்டளை தலைவர் ஜோதிராஜன் உள்ளிட்டவர்கள் சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினர். மயிலாடுதுறை தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இதே போல் சுமார் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
பயனாளிகளே... உங்கள் இல்லம் தேடி தாயுமானவர் வர்றார்: தஞ்சை கலெக்டர் அறிவிப்பு
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Thanjavur power cut: தஞ்சையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? முழுமையான விளக்கம்!!!
ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? முழுமையான விளக்கம்!!!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget