மேலும் அறிய

இறப்பிலும் இணைந்த தம்பதி... திருவையாறு அருகே ஏற்பட்ட அதிர்ச்சி

திருவையாறு அருகே நடுக்காவேரி அள்ளூர் அரசகுடியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (85) இவரது மனைவி மரகதம் (75). இவர்களுக்கு கடந்த 1972 -ல் திருமணம் நடந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அரசகுடியில் கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதி பற்றி கேள்விப்பட்டு பொதுமக்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர். இதுதான் உண்மையான மனமொத்த வாழ்க்கை என்றும் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி அள்ளூர் அரசகுடியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (85) இவரது மனைவி மரகதம் (75). இவர்களுக்கு கடந்த 1972 -ல் திருமணம் நடந்தது. திருமணமாகி 53 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், துளசிராமன் என்று மூன்று மகன்கள். இதில் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார்.  

இந்நிலையில் வயது மூப்பு காரணமாக ரெங்கராஜ் நேற்று  காலை 5.மணியளவில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மனைவி மரகதம் (75 ) கணவன் மீது கொண்ட அன்பினால் அதிர்ச்சியில் இருந்தவர் மதியம் 2 மணியளவில் உயிரிழந்து விட்டார். 53 ஆண்டுகள் வாழ்க்கைப்பயணத்தில் ஒன்றாக பயணம் செய்த இருவரும் சில மணிநேர வித்தியாசத்தில் இறப்பிலும் இணைந்து விட்டனர்.

இதையடுத்து இடுகாட்டில் இருவரது உடல்களையும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது.  மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் இறந்தது அரசகுடி கிராமவாசிகளை ஆழாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மனமொத்த வாழ்க்கை வாழ்ந்ததால்தான் தன் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மரகதமும் சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதுதான் உண்மையான காதல், பாசம், அன்பு. அருமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளதற்கு சாட்சி என்று அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கும்பகோணம் அருகே ஆசிரியையிடம் நகை பறிப்பு

கும்பகோணம் அருகே கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக் கதவை தட்டி ஆசிரியையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தமிழ்ச் செல்வி (43). இவர் விளாத்தொட்டி பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு இவரது வீட்டுக் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர்.

கதவை திறந்து பார்த்த செந்தமிழ்ச்செல்வியிடம் முகமூடி அணிந்த 7 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, 6 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
Embed widget