மேலும் அறிய

உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

திருட்டு தொடர்பாக புகார் அளிக்க வந்தவர்களை எஸ்.ஐ மிரட்டியதால் 9 மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக எஸ்பியிடம் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரைச் சேர்ந்தவர் முகம்மது பஷீர். இவர் கிளியனூரில் மளிகை கடை வைத்து நடத்திவருகிறார். இந்நிலையில் இவரது காரை அதே ஊரைச் சேர்ந்த முகம்மது ரபி என்பவர் வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அவர் வீட்டு பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் காரின் பதிவு புத்தகம் ஆகியவை காணாமல் போயுள்ளது. 


உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

இதில் தன்னிடம் கார் ஓட்டி வந்த முகம்மது நபி மீது சந்தேகம் ஏற்பட்டு ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளார். இது குறித்து, ஊர் தலைவர் முன்னிலையில் நடத்திய விசாரணையில் வாகனத்தின் ஆர்சி புக்கை திருடியதை ஒப்புக்கொண்ட முகம்மது ரபி, காணாமல் போன நகைக்கும் சேர்த்து 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை 2 மாதங்களுக்குள் திருப்பி தருவதாக கூறியுள்ளார். 


உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

இதையடுத்து, ரபியை பெரம்பூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளார். மறுநாள் இரவு முகம்மது பஷீர் வீட்டுக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் முன்னுக்குப்பின் தவறான தகவல்களை மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாகவும், இதனால் பஷீரின் மனைவி 9 மாத கர்ப்பிணியான பாத்திமா ஜீபேரியா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்து, அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு, குழந்தை இறந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள முகம்மது பஷீர்,  இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.


உதவி ஆய்வாளர் மிரட்டியதால் பெண்ணுக்கு கருச்சிதைவு - நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பியிடம் புகார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

அந்த புகார் மனுவில் நகை மற்றும் வாகனத்தின் பதிவு புத்தகத்தை திருடிய முகம்மது ரபி மீதும், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் ரபீக்குக்கு ஆதரவாக செயல்பட்டு, கர்ப்பிணி பெண்ணை விசாரணை செய்து உடல்நிலை பாதிக்கப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை உயிரிழப்பிற்கு காரணமான பெரம்பூர் காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து புகாரை பெற்று கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் காவலர் கர்ப்பிணி பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரகளையில் ஈடுபட்ட குடிபோதை கும்பல்... தட்டிக்கேட்ட போலீசுக்கு சரமாரி கத்திக்குத்து!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget