மேலும் அறிய

அரசு உதவியை எதிர்பார்த்து தென்னங்கீற்றுகளில் நம்பிக்கையை முனையும் மாற்றுத்திறனாளி தம்பதிகள்...!

’’எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால், ஆபத்தான நிலையில் தினந்தோறும் வாழ்ந்து வரும் எங்களுக்கு வாழ்வு கொடுத்ததாக இருக்கும்’’

கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் ஆற்றங்கரை தெருவில் கோவில் நிலத்தில் சிறிய குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர் அண்ணாதுரை-கௌரி தம்பதியினர். கணவன் மனைவி இருவருக்கும் இரண்டு கால்களால் நடக்கமுடியாத நிலையில், கைகளை கொண்டு தவழ்ந்து செல்லும் வகையில் மிகவும் ஏழ்மையான மாற்றுத்திறனாளிகள் ஆவர். இருவரது வீட்டிலும் ஏற்பட்ட எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும்  4 வயதில் குழுந்தை அனுஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

அரசு உதவியை எதிர்பார்த்து தென்னங்கீற்றுகளில் நம்பிக்கையை முனையும் மாற்றுத்திறனாளி தம்பதிகள்...!

மாற்றுத்திறனாளி தம்பதியினர், ஆற்றங்கரையோரம் கோவில் நிலத்தில் சிறிய குடிசை வீட்டில் தங்கி கீற்றுகளை முடைந்து தயாரித்து, விற்பனை அதில் வரும் சொற்ப வருமானத்தை கொண்டு குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாததால் ஒவ்வொரு நாளையும் கடக்க  போராடி வருகின்றனர்.  தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், ஊர் பொது மக்கள், மொத்த  கீற்று விற்பனை செய்பவர்கள் மூலம் தென்னங்கீற்றுகளை வாங்கி அதனை தங்கள் வீட்டிற்கு எதிரே உள்ள குளத்தில் ஊறவைத்து,  யாருடைய உதவியும் இன்றி குளத்தில் இறங்கி தண்ணீரில் ஊறிய கீற்றுகளை மாற்றுத்திறனாளி தம்பதியினர் இருவரும் யாருடைய உதவியின்றி வெளியே எடுத்து வந்து அதனை கீற்றுகளாக முடைந்து விற்பனை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் மகளான அனுஷ்கா குளத்திலிருந்து ஊறிய தென்னத்தோகைகளை இழுப்பதற்கு உதவி செய்வது, அவர்களது மூன்று சக்கர சைக்கிளை தள்ளி விடுவது, உணவு பரிமாறுவது, குடிநீர் கொடுப்பது உள்ளிட்ட தன்னால் செய்ய முடியும் உதவியை, பெற்றோர்களுக்கு  உறுதுணையாக  4 வயது குழுந்தை அனுஷ்கா இருந்து வருகிறார். 

அரசு உதவியை எதிர்பார்த்து தென்னங்கீற்றுகளில் நம்பிக்கையை முனையும் மாற்றுத்திறனாளி தம்பதிகள்...!

மேலும், அவர்கள் வசிக்கும் வீட்டைச்சுற்றி போதுமான பாதுகாப்பு இல்லாததால், கருவேல காடுகள் மற்றும் செடிகொடிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்கள் அவர்கள் வீட்டிற்குள் புகுந்து வருவதால் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு அனுதினமும் அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கும், தன்னுடைய மகளின் படிப்பு செலவிற்கும் தமிழக அரசு அல்லது சமூக ஆர்வலர்கள் உதவி செய்தால், புண்ணியமாக இருக்கும் என மாற்றுத்திறனாளி தம்பதியினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மாற்றுத்திறனாளி  கணவர் அண்ணாதுரை கூறும்போது,

அரசு உதவியை எதிர்பார்த்து தென்னங்கீற்றுகளில் நம்பிக்கையை முனையும் மாற்றுத்திறனாளி தம்பதிகள்...!

நானும் எனது மனைவியும் மாற்றுத்திறனாளிகள். எந்த வருமானமும் இல்லாததால் கீற்று பின்னி பிழைப்பு நடத்தி வருகிறோம். மழை காலம் என்பதால் இந்த பிழைப்பும் இனி செய்ய முடியாது. இது கோவில் நிலம் இந்த இடத்தில்தான் கொட்டகை போட்டு வசித்து வருகிறோம்.  பக்கவாட்டு சுவர் கட்ட முடியாமல் கீற்றுவைத்து மறைத்து வசித்து வருகின்றோம். எங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது.  கொரோனா காலத்தில் வேலை இன்றி மிகவும் கஷ்டப்பட்டு கிடந்தோம். பக்கத்து வீடுகளில் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தோம். எனது குழந்தைக்கு பால் வாங்க கூட காசு கிடையாது. அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால்தான் எனது குழந்தையுடன் இந்த முள்ளுக்காட்டில் வேலை செய்து பிழைத்து வருகிறோம். சில நாட்கள் இரவு நேரங்களில் வீட்டிற்குள் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் புகுந்து விடுவதால், நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளி என்பதால் எங்களால் உடனடியாக ஓடி வர முடியவில்லை. அருகில் வீடுகள் இல்லாததால்  உதவிக்கு கூட ஆட்கள் கிடையாது. பெண் குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு அவைகளை விரட்டி உயிருக்கு பயந்து, தன் மகளுக்காக வாழ்ந்து வருகின்றோம். மாவட்ட நிர்வாகம், எங்களது வாழ்க்கையை ஒளியேற்ற, தயவுசெய்து யாரவது உதவி செய்து எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுமாறு கைகூப்பி வேண்டுகோள் விடுக்கின்றார்.

இது குறித்து மாற்றுத்திறனாளி  மனைவி கவரி கூறும்போது

அரசு உதவியை எதிர்பார்த்து தென்னங்கீற்றுகளில் நம்பிக்கையை முனையும் மாற்றுத்திறனாளி தம்பதிகள்...!

நாங்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள், கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எங்களது கஷ்டத்தை பார்த்து ஒரு சில உதவி செய்தனர். எங்களுக்கு வீடு கிடையாது. எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும். எங்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால், ஆபத்தான நிலையில் தினந்தோறும் வாழ்ந்து வரும் எங்களுக்கு வாழ்வு கொடுத்ததாக இருக்கும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
பள்ளி மாணவிகளை வீடியோ, படம் எடுக்கத்தடை, சிசிடிவி கட்டாயம்- பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு!
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
வெளியான 10ஆம் வகுப்பு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள்; எங்கே, எப்படி காணலாம்?
Ramadoss Vs Anbumani: “அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
“அன்புமணிக்கு எந்த அதிகாரமும் கிடையாது“; அக்ரசிவ் மோடில் ராமதாஸ் - அல்லாடும் தொண்டர்கள்.!!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
CUET UG Result 2025: நாளை வெளியாகும் க்யூட் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
PM Modi: சீனா போட்ட கணக்கு, டக்குன்னு இந்தியா செஞ்ச டீல் - இனி EV உற்பத்திக்கு நோ ப்ராப்ளம், மோடி ட்ரிப்..
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mumbai IIT: ஆமா, 11th ஃபெயிலு.. விடாமுயற்சியால் ஐஐடியில் இடம், பானி பூரி விற்பவரின் மகன் சாதித்தது எப்படி?
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Mileage Bikes: தினமும் வண்டியும் ஓட்டணும், பெட்ரோலுக்கு அதிகம் செலவும் ஆகக்கூடாதா? மைலேஜில் அசத்தும் பைக்குகள்
Embed widget