மேலும் அறிய

தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தஞ்சை மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக திகழும் தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் உள்ள பெத்லகேம் என்ற இடத்தில் ஒரு மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார். பூமியில் மனிதராக அவர் பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.


தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

தஞ்சை மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக திகழும் தஞ்சை திரு இருதய பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மறை மாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. முன்னதாக இயேசுவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் சூசையப்பர், கன்னிமரியாள் வேடமணிந்த இருவர் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி வந்து ஆயர் டி.சகாயராஜ் கையில் வழங்கினர். அதை பெற்று கொண்ட ஆயர், அந்த சொரூபத்தை புனிதம் செய்து மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தார்.

அப்போது பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டபோது கிறிஸ்தவர்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. முடிவில் குழந்தை இயேசுவின் சொரூப ஆசீர் வழங்கப்பட்டது. திருப்பலி முடிந்ததும் ஆயர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்... தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தையர்கள் அரவிந்த், ஜெனித்லாரன்ஸ், முதன்மைகுரு ஜோசப்ஜெரால்டு, ஆயரின் செயலாளர் ஷெரில் கியூபர்ட் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பேராலயத்தின் முன்புறம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வழிபாட்டு கூடாரத்தை ஆயர் புனிதம் செய்து திறந்து வைத்தார்.

இன்று காலை 5.15 மணி, 7.15, 9 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஆயர் சகாயராஜ் தலைமையில் நன்றி வழிபாட்டு ஆராதனை நடைபெறுகிறது. தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள கார்மெல் குழந்தை இயேசு திருத்தலத்தில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருத்தல அதிபர் சுரேஷ்குமார் அடிகளார் தலைமையில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடந்தது. பின்னர் இயேசு பிறப்பை நினைவுகூரும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை கையில் ஏந்தி வந்து மேடையில் இருந்த கும்பகோணம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிச்சாமியிடம் வழங்கப்பட்டது.

அதை பெற்று கொண்ட அவர், அந்த சொரூபத்தை புனிதம் செய்தார். பின்னர் அவர், மேடையில் எங்கே பிறப்பார் இயேசு, ரசிகர் மோகத்திலா? சமூக நல தாக்கத்திலா? என்ற கருத்தை அடிப்படையாக வைத்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த குடிலில் சொரூபத்தை வைத்தார். தொடர்ந்து அவர், திருப்பலியை நடத்தி, கிறிஸ்துமஸ் செய்திகளை வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சுரேஷ்குமார், துணை அதிபர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம், மானம்புச்சாவடி புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கத்தோலிக்க ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வெற்றிக்கு பாடுபடுவோம்... கூட்டணி கட்சியினர் உறுதி
திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் வெற்றிக்கு பாடுபடுவோம்... கூட்டணி கட்சியினர் உறுதி
மாணவர் கையில் மதுக்கோப்பை... இதுதான் திராவிட மாடலா? - சீறும் அன்புமணி இராமதாஸ்!
மாணவர் கையில் மதுக்கோப்பை... இதுதான் திராவிட மாடலா? - சீறும் அன்புமணி இராமதாஸ்!
தஞ்சாவூர் வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு, மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம்!
தஞ்சாவூர் வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்: ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு, மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம்!
ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
ஆலக்குடி சக்கரை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டு போடாதிங்க” திருமாவளவன் பகீர் அறிவிப்பு
Thiruma VCK: ப்ளீஸ்..! ”விசிக வேட்பாளர்களுக்கு யாரும் ஓட்டு போடாதிங்க” திருமாவளவன் பகீர் அறிவிப்பு
Govt Internships: மிஸ் பண்ணிடாதீங்க..அரசு அலுவலகங்களில் ரூ.20 ஆயிரம் ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்- எங்கெங்கே? எப்படி?
Govt Internships: மிஸ் பண்ணிடாதீங்க..அரசு அலுவலகங்களில் ரூ.20 ஆயிரம் ஊதியத்துடன் இன்டர்ன்ஷிப்- எங்கெங்கே? எப்படி?
CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?
CBSE: புயலைக் கிளப்பிய மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் என்ன? மொழிகள் தேர்வு எப்படி?
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Iran Warns Trump: ”மேல கைய வெச்ச, மொத்த வளைகுடாவையும் நரகம் ஆக்கிருவோம்” - ட்ரம்பை எச்சரித்த ஈரான்
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Trump Iran War: 48 மணி நேரம் கெடு விதித்த ட்ரம்ப்.. ஹார்மஸ் ஓவர், அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்த ஈரான் - என்ன?
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 3000 வேட்புமனு தாக்கல், அதிகரித்த விஜய் சொத்து, காங்., வேட்பாளர்? - தமிழ்நாட்டில் இதுவரை
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
Thiruma VCK: திருமாவளவன் வாபஸ் - திரைமறைவில் நடந்தது இவ்ளோ இருக்கா? யார் காரணம்? MP தொகுதி
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
TN Election 2026: ”வேன் மீதே நிற்பார், டாடா மட்டுமே காட்டுவார்” விஜய் மீது அட்டாக் - பெரம்பூரில் அன்புமணி ஆவேசம்
Embed widget