மேலும் அறிய

விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் - மணியரசன்

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை நீக்கி அவர்களிடம் பறித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும்.

தஞ்சாவூர்: திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த நிலப்பறிப்பு சட்டத்தை நீக்க வேண்டும். செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். உழவர்களிடமிருந்து பல்வேறு வடிவங்களில் பறித்த நிலங்கள் அனைத்தையும் அவர்களுக்கே திருப்பி கொடுக்க வேண்டும். திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை விலக்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் - மணியரசன்

இதில் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். பொருளாளர் மணி மொழியன், சாமி கரிகாலன், தமிழர் தேசிய களம் அமைப்பாளர் கலைச்செல்வம், ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரை. முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன .

இதில் காவிரி உரிமை மீட்பு குழு துரை.ரமேஷ், செந்தில் வேலன், ராமலிங்கம், சிவப்பிரகாசம், சுந்தரவடிவேல், தமிழ் தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை, பழ. ராஜேந்திரன், ஜெயக்குமார், புண்ணியமூர்த்தி, தென்னவன், ராசேந்திரன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:

செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகு உள்ளது. மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. இதற்காக அரசு நிலத்தை பறிப்பதை கண்டித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.  இதனை கண்டித்து பலர் போராட்டம் நடத்திய பிறகு விவசாயிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

எனவே அவரை உடன் விடுவிக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். தற்போது சிலர் தூண்டுதல் பெயரில் எதிர் போராட்டம் நடந்து வருகிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை நீக்கி அவர்களிடம் பறித்த நிலங்கள் அனைத்தையும் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் எங்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பு , இயக்கங்களை திரட்டி பல்வேறு வடிவங்களில் நடைபெறும். நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget