மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்த வேட்பாளர்கள்

ஒரத்தநாடு திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் வேட்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கட்சிகளின் வேட்பாளர்கள் காலையிலே மக்களுடன் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். தஞ்சையில் திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மற்றும் அவரது  குடும்பத்தினர் கூட்டுறவு காலனியில் உள்ள மாநகராட்சி ஆரம்ப தொடக்கநிலைப்பள்ளியில் முதல் முதலாக வந்து தங்களது முதல் வாக்கு பதிவு செய்தனர்.


தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்த வேட்பாளர்கள்

ஒரத்தநாடு திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  திருவையாறு தொகுதி திமுக வேட்பாளர் துரை. சந்திரசேகரன் திருவையாறு தொகுதிக்குட்பட்ட கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கிராமங்கள்  தோறும் காலை முதலே முதியவர்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது. மீண்டும் 7 வது முறையாக திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தனது வாக்கை சரபோஜி கல்லூரியில் அமைக்கப்பட்டு  இருந்த வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நிச்சயமாக இந்த முறை தமிழகத்தில் அதிகமான வாக்குப்பதிவு நடைபெறும். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்துவதில் உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்தார். திரைப்பட நடிகரும் தஞ்சை மத்திய மாவட்ட தி மு க.வர்த்தக அணி அமைப்பாளருமான துரை. சுதாகர் தஞ்சை சரபோஜி கல்லூரி வாக்கு சாவடி மையத்தில் அவரது வாக்கை  செலுத்தினார். இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி தனது கணவருடன் சரபோஜி கல்லூரி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.


தஞ்சை மாவட்டத்தில் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்த வேட்பாளர்கள்

இதேபோல் கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாக்கோட்டை. க. அன்பழகன் இன்று தனது வாக்கினை சாக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பகுத்தறிவு தொடக்கப் பள்ளியில் வரிசையில் நின்று செலுத்தினார். கும்பகோணம் அருகே சோழபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தனது குடும்பத்தினருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வாக்களித்தார். தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில்,  கடந்த கால தேர்தல்களை விட இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. இது வெறும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. இது தமிழகத்திற்கும், டெல்லிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

தமிழ்நாடு யாருக்கும் அடிமை இல்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உலகிற்கு உணர்த்தும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்பார். திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாகத் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 11 நிலவரப்படி, கும்பகோணம்-  36.06%,  ஒரத்தநாடு - 39.05%, பாபநாசம் தொகுதி -  34.73%., பட்டுக்கோட்டையில் 36.55%, பேராவூரணி தொகுதி 38.51%, தஞ்சாவூர் தொகுதி 36.36%, திருவையாறு தொகுதி 37.15%, திருவிடைமதூர் 34.45% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் ஒரத்தநாடு தொகுதியில்தான் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

உர நிறுவன ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
உர நிறுவன ஊழியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget