மேலும் அறிய

தஞ்சாவூரில் 150 அடி உயர ராஜராஜசோழன் சிலை அமைக்க முயற்சி - மன்னார்குடி ஜீயர் ஆதரவு

''கோயில் வாசலில் இருக்க கூடிய தர்மத்துரோகி ராமசாமிநாயக்கர் சிலையை அகற்றி விட்டு, தர்ம ரஷ்கரான ராமானுஜர் சிலையும், மாமன்னர்கள் சிலையையும் வைக்க வேண்டும்''

தஞ்சாவூர் மாவட்டம்,  வண்ணாரப்பேட்டை ஊராட்சி புதிய பைபாஸ் பகுதியில் மாமன்னர் ராஜராஜசோழனுக்கு மரியாதை செய்யும் விதமாக 150 அடி உயரத்தில் பிரமாண்ட திருமேனி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று 17ம் தேதி நடக்கும் என்று இந்து எழுச்சி பேரவை தலைவர் சந்தோஷ்குமார் என்பவர் அழைப்பிதழ் அடித்து வெளியிட்டார். அடிக்கல் நாட்டுவிழாவிற்கு தருமபுரம் ஆதினம் 27வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகிப்பார். சர்வமய குருமார்கள் முன்னிலை வகிப்பார்கள் என்று அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சிலை அமைக்கும் இடத்திற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறி காலை முதல் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா தலைமையில் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன், எஸ்.ஐ.,க்கள் சித்ரா, செந்தமிழன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


தஞ்சாவூரில் 150 அடி உயர ராஜராஜசோழன் சிலை அமைக்க முயற்சி -  மன்னார்குடி ஜீயர் ஆதரவு

மேலும் பாதுகாப்பு பணிகளை ஏடிஎஸ்பி ரவிச்சந்திரன் பார்வையிட்டார். தொடர்ந்து அடிக்கல் நாட்டுவிழாவிற்காக வந்த இந்து எழுச்சி பேரவை தலைவர் சந்தோஷ்குமாரின் உரிய அனுமதி வாங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் சந்தோஷ்குமார் உட்பட 20 பேரை கைது செய்தனர். முன்னதாக, அடிக்கல் நாட்டு விழாவிற்காக, ராஜராஜசோழன் கட்டிய தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் எனும் பெரியகோயிலிருந்து, ராஜாரசோழனுக்கு அடிக்கல் நாட்டிடுவோம், இந்து தர்மத்தை காத்திடுவோம், தமிழர் கலாச்சாரத்தை வளர்த்திடுவோம் என்று கோஷமிட்டுவிட்டு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, மன்னார்குடி ராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறுகையில்,


தஞ்சாவூரில் 150 அடி உயர ராஜராஜசோழன் சிலை அமைக்க முயற்சி -  மன்னார்குடி ஜீயர் ஆதரவு

தமிழக அரசு இந்துக்கள், இந்து மகாராஜா என்பதற்காக சிலை அமைக்கூடாது என்கிறார்கள். இந்த சிலை அரசாங்கத்தின் சொத்துக்களில் அமைக்கவில்லை. எங்களுடைய சொந்த இடத்தில் சொந்த பணத்தில் கட்டுகின்றோம். ராஜராஜசோழன், இந்து ராஜாக்களை பற்றி தெரியாக கலெக்டர், டிஎஸ்பி, இருப்பதால், சூழ்ச்சியுடன் தடுக்கின்றார்கள். இதற்கு கோர்ட் ஆர்டரில் எந்த ஒரு அரசியல்வாதிகள் சிலையும் இருக்ககூடாது, எடுக்க வேண்டும் என்ற ஆணையுள்ளது. ஏன் இந்த தமிழக அரசு மற்றும் போலீசாரால், கோயில் வாசலில் உள்ள தர்மத்துரோகி சில பேருடைய சிலையை கூட எடுக்க முடியாமல் உள்ளனர். தர்மத்தின் வழியில் வாழ்ந்து, மகான் மாமன்னர் ராஜராஜசோழனின் சிலையை வைக்ககூடாது என்று சொல்வது வெட்ககேடு.  இது போன்ற செயல்கள் தொடர்ந்து செய்தால், இந்துக்கள் தொடர்ந்து போராட்டங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். அனைத்து கோயில் வாசலில் இருக்க கூடிய தர்மத்துரோகி ராமசாமிநாயக்கர் சிலையை அகற்றி விட்டு, தர்ம ரஷ்கரான ராமானுஜர் சிலையும், மாமன்னர்கள் சிலையையும் வைக்க வேண்டும். ராஜராஜசோழன் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தியே தீர்வோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget