மேலும் அறிய

தஞ்சையின் வரலாற்று சின்னம்! அரண்மனையை புனரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக அரசு - குவியும் பாராட்டு

தஞ்சாவூரின் பெருமைக்கும் மேலும் பெருமை சேர்க்கும் வரலாற்று பொக்கிஷமாக போற்றப்படும் அரண்மனையை புனரமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரின் பெருமைக்கும் மேலும் பெருமை சேர்க்கும் வரலாற்று பொக்கிஷமாக போற்றப்படும் அரண்மனையை புனரமைக்க தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். 

தஞ்சையின் பெருமையின் மற்றொரு சிகரம்

தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பெரிய கோவிலுக்கு அடுத்தபடியாக சொல்லக்கூடியது மராத்தா மாளிகை என்னும் அரண்மனை வளாகம். மிகவும் பழமையான மண்டபமாக கூறப்படும் இதில் மன்னர்கள் ஆட்சி காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், போர்க்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.  

110 ஏக்கர் பரந்து விரிந்த அரண்மனை வளாகம்

இந்த அரண்மனை வளாகம் மிகப் பெரியது. 110 ஏக்கர் அளவுக்கு பரந்து விரிந்தது. இந்த வளாகத்தினுள் பல அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இங்குதான் சரஸ்வதி மஹால் நூலகமும், தஞ்சைக் கலைக் கூடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் மிக மிக பழமையானவை. அதிலும் தஞ்சை சரஸ்வதி நூலகம் தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது. அதுமட்டுமில்லாமல், உலகில் இரண்டாவது பழமையானது.


தஞ்சையின் வரலாற்று சின்னம்! அரண்மனையை புனரமைக்க நிதி ஒதுக்கிய தமிழக அரசு - குவியும் பாராட்டு

காண்போரை வியக்க செய்யும் ஓவியங்கள்

இங்குள்ள ஓவியங்கள் காண்போர் கண்களை வியக்கச்செய்யும். இமைகளை மூடவிடாமல் அழகில் ஆழ்த்தும் அற்புத படைப்புகள் என்றால் மிகையில்லை. அனைவரது கருத்தும் இதை ஒத்துதான் இருக்கும். அந்தளவிற்கு அழகில் மயக்கும் ஓவியங்கள் நிறைந்தது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடங்களில் இதுவும் ஒன்றாகும். 

புனரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு

மராத்தா மாளிகையை புனரமைக்கும் பணியினை தற்போது தமிழக அரசு செய்து வருகிறது. கலைக்கூடம் தர்பார் மகால், சார்ஜா மாடி, சரஸ்வதி மஹால், நூலகம் ஆகியவை 25 கோடி ரூபாய் நிதியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரம் ஆண்டு கால ஐம்பொன் சிலை உள்ள கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்கணும்

பழமை வாய்ந்த சிலைகளை நாம் பாதுகாப்பதால் வரலாற்றை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். வரலாற்றை பாதுகாக்க தஞ்சை அரண்மனை வளாகத்தை சீரமைக்கும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: வரலாற்று சின்னமான தஞ்சை அரண்மனை புனரமைக்கப்படுவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 1000 ஆண்டுகால ஐம்பொன் சிலைகள் உள்ள கலைக்கூடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget