மேலும் அறிய

தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

’’ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள  அய்யன் குளம் 5 கோடி  மதிப்பில் சீரமைப்பட்டு வருகின்றது’’

மத்திய அரசு இந்தியாவில் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு அறிவித்தது. அதில் தமிழகத்தில் உள்ள 11 நகரங்களில் தஞ்சை நகரமும் ஒன்று. இதற்காக சுமார் 1289 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு 50 சதவீதமும், மாநில அரசு 50 சதவீதமும் வழங்குகிறது. இதில் ஸ்மார்ட் சிட்டியாகும் நகரப்பகுதியில் குடிநீர், வடிகால், பழமையான குளங்கள், நீர் நிலைகள், சாலைகளில் தண்ணீர் தேங்காமல், ரோடு வசதிகள், சரித்திர புகழ்வாய்ந்த இடங்கள், அரண்மனை மற்றும் புராதன கட்டிடங்கள் இருப்பதால், அதனை பழைய மாறாமல் அப்படி பழைய நிலையைும் மாற்றாமல், நவீன முறையில் மாற்றி முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றுவது தான் ஸ்மார்ட் சிட்டியாகும்.


தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

புராதன நகரமான தஞ்சையில் நீராதாரத்துக்காக மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட குளங்களில் பல ஆக்கிரமிப்பு காரணமாகப் படிப்படியாக மறைந்தன. தஞ்சை நகரை ஆண்ட மன்னர்கள், காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டன. குறிப்பாக, பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழி, மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கத்தைச் சுற்றிலும் அமைந்திருக்கும் ரகுநாத நாயக்க மன்னர் கட்டிய குளங்களில், தஞ்சாவூர் மேலவீதியிl உள்ள அய்யங்குளமும் ஒன்று. இக்குளத்திற்கு சுற்றிலும் சுடுமண் செங்கல்களால் இந்த நீர்வழிப்பாதை 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 300 மீட்டரில் இருந்து மட்டுமே தண்ணீர் சென்றது. தற்போது சிவகங்கை பூங்கா அருகே மேலவீதிக்கு திரும்பும் இடத்தில் இருந்து 800 மீட்டர் தூரம் வரையில் தண்ணீர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுரங்க நீர்வழிப் பாதையில் 9 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளான, அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.


தஞ்சையில் நாயக்க மன்னர்கள் வெட்டிய அய்யன் குளம் - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் அழகு பெறுகிறது

பின்னர் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் நீர் ஆதாரத்திற்காக பிரமாண்டமான வகையில் அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது. இந்த குளத்தில் இருந்து மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நீர்வழிப்பாதை நாளடைவில் செயலற்று விட்டது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதியில் உள்ள  அய்யன் குளம் 5 கோடி  மதிப்பில் சீரமைப்பட்டு வருகின்றது.

இது குறித்து சமூக ஆர்வலர் கூறுகையில், தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் அவை கடமையாற்ற காத்திருக்கின்றன. இவற்றின் பாதாள வழித்தடங்கள் தற்போதும் உயிர்ப்புடன் தான் உள்ளது. ஆனாலும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நீர் கட்டமைப்புகள் முடங்கி கிடக்கின்றன. தஞ்சை பெரிய கோவிலுக்கு வடக்கே அமைந்துள்ள சிவகங்கை பூங்காவில் சிவகங்கை குளம் உள்ளது. இந்த குளம் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. தஞ்சை நகரில் உள்ள குளங்களில் இந்த ஒரு குளம் மட்டுமே பராமரிப்பில் உள்ளது. தஞ்சையின் தென்மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீரை செவப்பன் ஏரிக்கு வாரிகள் மூலம்  கொண்டு வந்து, நீரை சேமித்து சேற்றை அடியில் தங்கவிட்டு தெளிந்த நீரை மட்டும் குழாய்களின் வழியே சிவகங்கை குளத்திற்கு அனுப்பி அங்குள்ள கிணறுகளில் வண்டல் மண்ணை படியவிட்டு தெளிந்த நீரை சுடுமண் குழாய் வழியாக மேலவீதியில் உள்ள அய்யன் குளத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன் குளத்தை சீரமைக்க 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குளத்தின்  4 புறமும் உள்ள படிக்கட்டுகளும், குளத்தை சுற்றிலும் அழங்கார மின்விளக்குகள், நடுவில் நீராழி மண்டபம், அதில் பக்தர்கள் சென்று வழிபடும் வகையில் பாலங்கள், பொது மக்கள் குளத்தில் பாதுகாப்பாக நின்று பார்ப்பதற்காக, குளத்தை சுற்றிலும், சில்வரினால் குழாய்கள், ஆயகலைகள் 64 வகையான ஒவியங்கள், பொது மக்கள் கவரும் வகையில், விவசாய தொழிலான கதீர்கள், வாழை பழத்தார்கள்,  கரும்பு உள்ளிட்டவை நவீன வர்ணம் மூலம் ஒவியமாக வரைந்துள்ளனர். ரகுநாத நாயக்க மன்னர் அமைத்த அய்யன் குளத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Embed widget