மேலும் அறிய

மயிலாடுதுறையில் காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

’’முருகனின் தாய் தன்மகனை  விட்டுவிடுமாறு  காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சிய நிலையில்  பெரம்பூர் காவல்நிலை காவலர்கள்  தாயாருடன் முருகனை வெளியே அனுப்பியுள்ளனர்’’

தமிழ்நாட்டில் காவலர்களால் அவ்வப்போது பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவம் சமீபகாலமாக தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தாக்கப்படும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், காவலர்கள் பொதுமக்களை சட்டத்திற்கு புறம்பாக தாக்கும் நிகழ்வு இன்றளவும் நின்றபாடில்லை. மேலும் காவலர்களின் தாக்குதல்களால் பலர் உயிரிழந்த சம்பவங்களும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. இதனைக் குறைப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள சூழலிலும் காவல் நிலைய காவலர்கள் சிசிடிவி கேமராவை திசை திருப்பி வைத்து விடும் சிசிடிவி கேமராவை ஆப் செய்துவிட்டும் பொதுமக்களை தாக்கும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதற்கு உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை முக கவசம் அணிய வில்லை என்பதற்காக காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்தேறியது. இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது மயிலாடுதுறையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.


மயிலாடுதுறையில் காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை பனங்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவரின் 25 வயதான மகன் முருகன். இவரது தாய்மாமன்கள் பழனிவேல், சத்தியராஜ் ஆகிய இருவர்களுக்குள் சொத்து பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் முருகனும் அவரது தாயார் உமாவும் காவல்நிலையத்தில் இருந்தபோது தாய்மாமன் சத்தியராஜ் முருகனை திட்டியுள்ளார். 


மயிலாடுதுறையில் காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

அதற்குப் பதில் கூறிய முருகனை சத்தியராஜிக்கு ஆதரவாக பெரம்பூர் காவல் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் முருகனை தலையில் அடித்து சட்டையைப்பிடித்து தனி அறைக்குள் இழுத்துச் சென்று சகட்டுமேனிக்குத் திட்டியும், அடித்தும் பைக்கின் சாவியை பிடுங்கிக்கொண்டு காவல்நிலையத்தில் அமர வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட முருகனின் தாய் தன்மகனை  விட்டுவிடுமாறு  காவலர்களின் காலில் விழுந்து கெஞ்சிய நிலையில்  பெரம்பூர் காவல்நிலை காவலர்கள்  தாயாருடன் முருகனை வெளியே அனுப்பியுள்ளனர். 


மயிலாடுதுறையில் காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

இதனால் மிகுந்த மனஉளைச்சல் ஆளான முருகன் மயக்கமடைந்து உள்ளார். அதனை தொடர்ந்து முருகனை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சொத்து பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டு தன்னை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, பெரம்பூர் காவல்நிலைய காவலர்களிடம் கேட்டதற்கு, சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் யாரும் தாக்கவில்லை என்றும், தேவையின்றி காவல் நிலையத்தில் பேசியதற்காக எச்சரிக்கை மட்டுமே செய்து அனுப்பியதாகவும் விளக்கம் அளித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush :  நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Dhanush : நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்.. தனுஷ் அதிரடி..
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Lok Sabha Election 2024 LIVE: ஆந்திராவில் மதியம் 3 மணி வரை 55 சதவீத வாக்குப்பதிவு..!
Savukku Sankar: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
CBSE Class 10th Result: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் வெளியீடு; 93.6% தேர்ச்சி- காண்பது எப்படி?
Box Office Prediction : இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
இந்த ஆண்டு ரூ.100 கோடி வசூலை எடுக்கப்போகும் முதல் தமிழ் படம் எது?
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
Andhra Assembly Election: பளார்! வரிசையில் நிற்காத எம்.எல்.ஏ.வுக்கு கன்னத்திலே அறை விட்ட வாக்காளர் - நீங்களே பாருங்க
North Korea Rules: ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
ரெட் லிப்ஸ்டிக், நீல கலர் ஜீன்ஸ் போட்டால் வழக்கு - வடகொரியாவில் எதற்கெல்லாம் தடை தெரியுமா?
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
போலீஸ் வீட்டிலேயே கொள்ளை... பொதுமக்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கும்? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
Embed widget