மேலும் அறிய

48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும்.

தஞ்சாவூர்: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர் என்று சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று ஸ்பர்ஸ்(SPARSH) திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு, வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். 


48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

முகாமில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக ஓய்வூதியம் உட்பட பணப் பலன்களை பெறாமல் இருந்தவர்களுக்கு அதற்கான ஆணைகளும், காசோலைகளும் இந்த முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும். மேலும் இதற்காக சிறப்பு செல்போன் எண் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். 

எங்கள் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி யார் கேட்டாலும் ஓடிபி 6 இலக்க எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டுமே வழங்க வேண்டும்.

அதே போல் டிஜிட்டல் கைது என்பதை யாரும் நம்ப வேண்டாம், அது போன்ற எந்த முறையும் இந்தியாவில் கிடையாது, நீங்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்த கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

ஓய்வூதியம் பெறுவர்கள் இறந்துவிட்டால் அவர்களது உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கான குறைதீர்க்கும் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி குறைகளை கூறினாலும், அதற்கான தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்பாடுகளை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து செய்திருந்தது.

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget