மேலும் அறிய

48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும்.

தஞ்சாவூர்: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர் என்று சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று ஸ்பர்ஸ்(SPARSH) திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு, வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். 


48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

முகாமில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக ஓய்வூதியம் உட்பட பணப் பலன்களை பெறாமல் இருந்தவர்களுக்கு அதற்கான ஆணைகளும், காசோலைகளும் இந்த முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும். மேலும் இதற்காக சிறப்பு செல்போன் எண் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். 

எங்கள் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி யார் கேட்டாலும் ஓடிபி 6 இலக்க எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டுமே வழங்க வேண்டும்.

அதே போல் டிஜிட்டல் கைது என்பதை யாரும் நம்ப வேண்டாம், அது போன்ற எந்த முறையும் இந்தியாவில் கிடையாது, நீங்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்த கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

ஓய்வூதியம் பெறுவர்கள் இறந்துவிட்டால் அவர்களது உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கான குறைதீர்க்கும் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி குறைகளை கூறினாலும், அதற்கான தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்பாடுகளை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து செய்திருந்தது.

தலைப்பு செய்திகள்

150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
150 ஆண்டுகாலக் காத்திருப்பு... 120% நெரிசலில் தவிக்கும் ரயில் பாதை! விடிவு காலம் எப்போது?
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
Thanjavur power cut: தஞ்சை மக்கள் கவனத்திற்கு - நாளை (09-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகள் தீர வேண்டுமா? தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள இந்தக் கோயில்களைத் தரிசியுங்கள்!
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை
சாஸ்த்ரா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை 2026: தரவரிசைப் பட்டியலில் சென்னை மாணவர் சாதனை

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Embed widget