மேலும் அறிய

48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும்.

தஞ்சாவூர்: முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர் என்று சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று ஸ்பர்ஸ்(SPARSH) திட்டத்தின் கீழ், முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஓய்வூதியதாரர்களுக்கு, வருடாந்திர உயிர் சான்று அடையாளம் காணவும், ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்கவும், குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டார். 


48 மணிநேரத்தில் ஓய்வூதியம் கிடைக்குமா? அது எப்படி? - இவர் சொல்றத கேளுங்க

முகாமில், சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று பல ஆண்டுகளாக ஓய்வூதியம் உட்பட பணப் பலன்களை பெறாமல் இருந்தவர்களுக்கு அதற்கான ஆணைகளும், காசோலைகளும் இந்த முகாமில் வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக அதை பரிசீலனை செய்து குடும்ப ஓய்வூதியம் 48 மணி நேரத்தில் வழங்கப்படும். இந்தியா முழுமைக்கும் சென்னையில் உள்ள எங்களது அலுவலகம் தான் குடும்ப ஓய்வூதியத்தை வழங்குகிறது. குடும்ப ஓய்வூதியத்துக்கு 48 மணி நேரத்தில் தீர்வளிக்கப்படும். மேலும் இதற்காக சிறப்பு செல்போன் எண் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கவில்லை என தெரிவித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். 

எங்கள் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி யார் கேட்டாலும் ஓடிபி 6 இலக்க எண் போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம். சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேரில் வந்து மட்டுமே வழங்க வேண்டும்.

அதே போல் டிஜிட்டல் கைது என்பதை யாரும் நம்ப வேண்டாம், அது போன்ற எந்த முறையும் இந்தியாவில் கிடையாது, நீங்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். தமிழகத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான எந்த கோரிக்கை மனுக்களும் தற்போது நிலுவையில் இல்லை. இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 

ஓய்வூதியம் பெறுவர்கள் இறந்துவிட்டால் அவர்களது உறவினர்கள் இறப்பு சான்றிதழை பெற்று எங்களுக்கு செல்போனில் அனுப்பி வைத்தால், நாங்கள் அவர்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் 2.10 லட்சம் ஓய்வூதியர்களும், தஞ்சாவூரில் 6 ஆயிரம் ஓய்வூதியர்களும் உள்ளனர். இதில் 60 ஆயிரம் பேர் குடும்ப ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் நாடு முழுவதும் வசித்து வருகின்றனர். 

இவர்களுக்கான குறைதீர்க்கும் சேவை மையம் விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி குறைகளை கூறினாலும், அதற்கான தீர்வு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏற்பாடுகளை சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், தக்ஷின் பாரத் ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல சங்கம் இணைந்து செய்திருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget