மேலும் அறிய

ஏபிபிநாடு செய்தி எதிரொலி... ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாசன வசதி பெறும் பேய்வாரி வாய்க்காலை தூர்வாரும் பணிகள் மும்முரம்

8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள  ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக செல்லும் பேய்வாரி வாய்க்காலில் மண்டிக்கிடந்த செடி, கொடிகளை தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டும் என்று ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சி வழியாக பேய்வாரி வாய்க்கால் ஓடுகிறது. இதன் வாயிலாக 8 நம்பர் கரம்பை, களிமேடு, பிள்ளையார்நத்தம் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள  ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பேய்வாரி வாய்க்கால் சக்கரசாமந்தம், களிமேடு வழியாக செல்கிறது. இந்த பேய்வாரி வாய்க்கால் முறையாக முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் செடி, கொடிகள் மண்டி வாய்க்காலா அல்லது காடா என்று தெரியாத அளவிற்கு மாறி இருந்தது. இதனால் கடந்தாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டபோது தண்ணீர் செல்வதில் பெரும் இடர்பாடு ஏற்பட்டது என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த பேய்வாரி வாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி, சக்கரசாமந்தம், களிமேடு உட்பல பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீர் உள்வாங்கும் இந்த பேய்வாரி வாய்க்கால் சிறிய மழைக்கு கூட தாங்காது என்பது போல் மாறி இருந்தது. மேலும் இந்த பேய்வாரி வாய்க்காலில் குப்பைகளும் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்பட்டது. இந்த கோடைகாலத்திலேயே இந்த பேய்வாரி வாய்க்காலை குருவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி பாய்ந்து செல்லும்.

இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஏபிபிநாடும் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஆறு, பாசன வாய்க்கால்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து இந்த பேய்வாரி வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் தொடங்கின. மண்டிக்கிடந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டு மண்மேடுகள் தண்ணீர் பாய்ந்து செல்லும் அளவிற்கு தூர் வாரப்பட்டது. மேலும் தூர்வாரிய மண்ணை கரையில் கொட்டி பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் செய்தி வெளியிட்ட ஏபிபி நாடு மற்றும் பணிகளை மேற்கொண்டதற்காக அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர். மேலும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget