மேலும் அறிய

மயிலாடுதுறை: ”முன்னாள் முதல்வரின் கனவு இது” - சுகாதாரத் துறை அமைச்சர் பேசியது என்ன?

தமிழ்நாட்டிற்கு 10.25 கோடி தடுப்பூசிகள் தேவை என மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு, புதிதாக அமைக்கப்பட்ட 6 கேஎல் கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்  உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா வார்டில் நோயாளிகளிடம் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 


மயிலாடுதுறை: ”முன்னாள் முதல்வரின் கனவு இது” - சுகாதாரத் துறை அமைச்சர் பேசியது என்ன?

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மூன்றாவது அலை ஏற்பட்டால்  குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுவதால் பாதிப்பில் இருந்து தற்காத்துகொள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொது மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தற்போது மயிலாடுதுறையில் குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு மையம் 40 படுக்கைகள் உடனான 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் கொண்ட பிரத்யேக மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முதுகலை மருத்துவர்கள் கொரோனா தாக்கம் குறைந்ததால் தேவைப்படும் இடங்கள் மற்றும் காலி பணி இடங்களுக்கு  நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டங்களுக்கு தேவையான மருத்துவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர்கள் நேரடி நியமனம் செய்து வருகிறார்கள்” என்றார்.


மயிலாடுதுறை: ”முன்னாள் முதல்வரின் கனவு இது” - சுகாதாரத் துறை அமைச்சர் பேசியது என்ன?

மேலும் தொடர்ந்து பேசியவர்,  ”ஒரு கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. 1 கோடியே 6 லட்சம் வரை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 6 லட்சத்து 20 ஆயிரம் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில்  18 வயதைக் கடந்தவர்களுக்கான 2 டோஸ் தடுப்பூசி 11 கோடியை 36 லட்சம் போடப்படவேண்டும். தமிழ்நாட்டிற்கு 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது” என்றார். 


மயிலாடுதுறை: ”முன்னாள் முதல்வரின் கனவு இது” - சுகாதாரத் துறை அமைச்சர் பேசியது என்ன?

”தற்போது கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் அறிவிக்கப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பது  முன்னாள் முதல்வர் கலைஞரின் கனவு அந்த அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் மருத்துவ கல்லூரி ஏற்படுத்தப்படும் என்றார். தற்போது உள்ள கொரோனாவிற்கு இந்த தடுப்பூசி சிறந்தது. ஒரு தடுப்பூசி போட்டால் 75 சதவிகிதம் பாதிப்பு தவிர்க்கப்படும் 2 தடுப்பூசி போடப்பட்டால் 95 சதவிகிதம் பாதிப்பில் இருந்து மீளலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம்” என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கு சென்றாலும் தடுப்பூசி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டிக்கு பதிலளித்த அமைச்சர், ”அவர் எங்கு சென்றாலும் அங்கே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்றார். இந்நிகழ்வில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,  சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள், நிவேதா.முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget