மேலும் அறிய

ரூ.3 கோடியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்... பெரிய சூரியரில் நிறைவடையும் நிலை

அலுவலகக் கட்டிடம் மற்றும் கழிப்பறை வளாகம் கட்டுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கேலரியின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டம் பெரிய சூரியரில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் வரும் ஜனவரி மாதம் திறக்க இருக்காங்க என்ற தகவல் வாலிபர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் திறக்கப்படுவது மூலம் திருச்சி உலக அளவில் கவனம் பெறும் வாய்ப்புகளும் உருவாகி உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டில் மிக முக்கிய இடம் பிடிப்பது ஜல்லிக்கட்டுதான். இதற்கு தடை வந்தபோது அதை எதிர்த்து சென்னை மெரினா பீச்சில் வாலிபர்கள் திரண்டு போராட்டம் நடத்தியது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தடையை உடைத்து இப்போது பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு தமிழகம் முழுவதும் வெகு கொண்டாட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

தயாராகும் பிரமாண்ட புதிய அரங்கம்
 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி அருகே பெரிய சூரியூர். இங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பிரம்மாண்டமான புதிய அரங்கம் ஒன்று தயாராகி வருகிறது. இந்த அரங்கம் 2026-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 810 பேர் அமர்ந்து போட்டிகளைக் காணும் வகையில் கேலரி வசதி செய்யப்பட்டுள்ளது. கேலரியின் ஒரு பகுதி பொதுமக்களுக்காகவும், மற்றொரு பகுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த அரங்கம் பயன்பாட்டிற்கு வந்து விடும். அப்போதுதான் பொங்கல் பண்டிகையின் போது பெரிய சூரியரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏதுவாக இருக்கும் என்பதால் இப்போதே வாலிபர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ரூ.3 கோடி மதிப்பில் கட்டுமானப்பணிகள்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், சுமார் ரூ.3 கோடி மதிப்பீட்டில் இந்த அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  கோரிக்கையின் பேரில் மாநில அரசு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரதிநிதித்துவப்படுத்தும் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அரங்கம்

பல இடங்களை ஆய்வு செய்த பிறகு, இப்பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பெயர் பெற்ற சூரியூர் கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் இந்த அரங்கம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஒவ்வொரு வருடமும் இந்தப் பகுதியில், மாட்டுப் பொங்கல் அன்று நடத்தப்படுவது வழக்கம். இந்தத் திட்டமானது, இடம் ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள தகவல்களின்படி, கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும், ஜனவரி முதல் வாரத்திற்குள் பணிகள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
810 பேர் அமர்ந்து ரசிக்கலாம்

புதிய அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியில் மொத்தம் 810 பேர் அமர்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம். கேலரியின் ஒருபுறம் பொதுமக்களும், மறுபுறம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களும் அமர்வதற்கான இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் காளைகளை ஒழுங்கான முறையில் அவிழ்த்து விடுவதற்காக 'வாடிவாசல்' அமைக்கும் பணியும் இதில் அடங்கும். மேலும், ஒரு அலுவலகக் கட்டிடம் மற்றும் கழிப்பறை வளாகம் கட்டுவதும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கேலரியின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. மற்ற பகுதிக்கான சிமெண்ட் கான்கிரீட் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளன.

திருச்சி மாவட்ட கலெக்டர் வி. சரவணன், இந்த கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாக முடிக்குமாறு ஒப்பந்ததாரருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இப்பணிகள் இன்னும் மூன்று வாரங்களுக்குள் முடிவடைந்து, ஜனவரி 4-ம் தேதிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இந்த புதிய அரங்கத்திலேயே நடைபெறும் என்ற எதிர்பார்பபு உறுதியாகி உள்ளது_

இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கம், இப்பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மேலும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த வழிவகுக்கும். இது உள்ளூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. இது இப்பகுதியின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகவும் மாறும். இந்த அரங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஒரு முக்கிய திட்டமாகும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget