மேலும் அறிய

தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

நள்ளிரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறி, எம்ஜிஆரின் சிலையில் கையை வைத்து தள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது

தஞ்சை வடக்குவீதியில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை மர்மநபர்கள் பெயர்த்து கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை வடக்குவீதி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிமுக எம்எல்ஏவும், தற்போது அமமுக மாநில பொருளாளருமான ரங்கசாமி இருந்த போது, மறைந்த முன்னாள்  முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டரை அடி உயரமுள்ள மார்பளவு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

இந்நிலையில், அப்பகுதி வழியே சென்றவர்கள் அந்த சிலை காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்து போது, எம்ஜிஆரின் மார்பளவு சிலையை அடியோடு பெயர்த்து கீழே தள்ளி விட்டுள்ளது தெரிய வந்தது.   இது குறித்து, அப்பகுதி அதிமுகவினர்,  அதிமுக கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, 8வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டறிந்தனர். உடனடியாக அதே இடத்தில், எம்ஜிஆரின் அதே  சிலையை மீண்டும் இடத்தில் அதிமுகவினர் வைத்த, மாலை அணிவித்தனர்.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் இடித்து கீழே தள்ளியது தெரிய வந்தது. பின்னர் அருகிலுள்ள வணிக நிறுவனத்திலுள்ள சிசிடிவி கேமரா கண்காணித்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறி, எம்ஜிஆரின் சிலையில் கையை வைத்து தள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த போலீசார், சிசிடிவி கேமராவில் உள்ளவரை பற்றி, அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தஞ்சை,, வடக்கு வாசல், கல்லறை மேட்டுத்தெருவை சேர்ந்த சேகர் (எ) அந்தோனி (40) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை தேடிய போது, வடக்கு வீதியில் குடிபோதையில் தள்ளாடிய படி நடந்து சென்று கொண்டிருந்தார்.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

சேகரை கண்டறிந்த போலீசார், அவரை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என போதையில் போலீஸ் வாகனத்தில் மறுத்து போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தார்.பின்னர், சேகரிடம், விசாரணைக்கு தான் செல்கின்றோம் என பேசி, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். எம்ஜிஆரின் சிலை இடித்து பெயர்க்கப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Embed widget