மேலும் அறிய

தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

நள்ளிரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறி, எம்ஜிஆரின் சிலையில் கையை வைத்து தள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது

தஞ்சை வடக்குவீதியில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை மர்மநபர்கள் பெயர்த்து கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை வடக்குவீதி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிமுக எம்எல்ஏவும், தற்போது அமமுக மாநில பொருளாளருமான ரங்கசாமி இருந்த போது, மறைந்த முன்னாள்  முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டரை அடி உயரமுள்ள மார்பளவு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

இந்நிலையில், அப்பகுதி வழியே சென்றவர்கள் அந்த சிலை காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்து போது, எம்ஜிஆரின் மார்பளவு சிலையை அடியோடு பெயர்த்து கீழே தள்ளி விட்டுள்ளது தெரிய வந்தது.   இது குறித்து, அப்பகுதி அதிமுகவினர்,  அதிமுக கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, 8வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டறிந்தனர். உடனடியாக அதே இடத்தில், எம்ஜிஆரின் அதே  சிலையை மீண்டும் இடத்தில் அதிமுகவினர் வைத்த, மாலை அணிவித்தனர்.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் இடித்து கீழே தள்ளியது தெரிய வந்தது. பின்னர் அருகிலுள்ள வணிக நிறுவனத்திலுள்ள சிசிடிவி கேமரா கண்காணித்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறி, எம்ஜிஆரின் சிலையில் கையை வைத்து தள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த போலீசார், சிசிடிவி கேமராவில் உள்ளவரை பற்றி, அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தஞ்சை,, வடக்கு வாசல், கல்லறை மேட்டுத்தெருவை சேர்ந்த சேகர் (எ) அந்தோனி (40) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை தேடிய போது, வடக்கு வீதியில் குடிபோதையில் தள்ளாடிய படி நடந்து சென்று கொண்டிருந்தார்.


தஞ்சையில் இடித்து தள்ளப்பட்ட எம்ஜிஆர் சிலை - போலீஸ் விசாரணையில் சிக்கிய குடிமகன் கைது

சேகரை கண்டறிந்த போலீசார், அவரை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என போதையில் போலீஸ் வாகனத்தில் மறுத்து போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தார்.பின்னர், சேகரிடம், விசாரணைக்கு தான் செல்கின்றோம் என பேசி, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். எம்ஜிஆரின் சிலை இடித்து பெயர்க்கப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
உள்ளிருப்பு போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: தஞ்சையில் ஏற்பட்ட பரபரப்பு
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
சொத்து தகராறா? குடும்ப பிரச்சினையா? இனி WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை!
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்
தண்டனைக்குரிய குற்றம்... தகவல் தெரிந்து மறைக்காதீங்க: தஞ்சை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
Embed widget