மேலும் அறிய

தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தனியார் பஸ் நிறுவனம் மீது 700 கோடி மோசடி புகார் - 12,000 பேரிடம் பணம் வசூல்

''1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதந்தோறும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கி வந்தார்''

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தின் மூலம் அதிகளவில், பணம் வழங்குவதாக, கூறி மோசடி செய்து விட்டதாக,  முதலீடு செய்த பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள்,  தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர். தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன்.  ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.  பஸ் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாகப் ஏராளமானவர்களிடம் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதந்தோறும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கி வந்தார்.  பின்னர், கடந்த இரண்டு ஆண்டாகப் பங்குதாரர்களுக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றி  வந்துள்ளார். இந்நிலையில், கமாலுதீனிடம், பங்குதாரர்கள் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாகப் பஸ் சேவை இயங்காததால், பங்கு பணத்தை வழங்க முடியவில்லை. விரைவில் பங்கு பணத்தை வழங்கி விடுவதாகக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று,மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட கமாலுதீன் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இறந்து விட்டார்.


தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தனியார் பஸ் நிறுவனம் மீது 700 கோடி மோசடி புகார் - 12,000 பேரிடம் பணம் வசூல்

ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது  மகன்களான அப்சல் ரஹ்மான்ஹாரிஸ் ஆகியோர் உள்ள நிலையில், அவர்களைப் பங்குதாரர்கள் நேரில் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்து, இதற்கு எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி,அனுப்பி விட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், பஸ்சில் முதலீடு செய்வதற்காகத் தனியாகப் பல ஏஜென்ட்கள் மூலம், பணத்தைத் வசூலித்த கமாலுதீன், அந்த வசூல் செய்த பணத்தில், பஸ்களை வாங்காமல், வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம், 130 பஸ்களை வாங்கியுள்ளார். பின்னர், பங்குதாரர்களின் முதலீடு மூலம், தனது மனைவி, மகன் மற்றும் பினாமி எனப் பல்வேறு பெயர்களில், பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஹோட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் எனச் சுமார் 400 கோடிக்கும் மேலாக, கமாலுதீன் சொத்துக்களை வாங்கியது தெரியவந்தது. இதைப் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளிக்கக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கமாலுதீன் எங்களிடம் கூறும் போது ராஹத் பஸ் சர்வீஸ்சில், 1 லட்சம் முதலீடு செய்தால், பங்கு தொகை 2 ஆயிரம் ரூபாய் எனவும், 5 லட்சம் முதலீடு செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய நாங்கள் முதலீடு செய்த நிலையில், முதல் மூன்று மாதம் முறையாகப் பணம் கிடைத்தது. அதன் பிறகு பங்கு தொகை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவரது மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்தினரிடம் கேட்டால், பணம் இல்லை எனக் கூறுகின்றனர். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல், வெளிநாட்டில் உள்ளவர்கள் எனச் சுமார் 12 ஆயிரம் பேர், 700 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர வேண்டும்  என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget