மேலும் அறிய

தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தனியார் பஸ் நிறுவனம் மீது 700 கோடி மோசடி புகார் - 12,000 பேரிடம் பணம் வசூல்

''1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதந்தோறும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கி வந்தார்''

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தின் மூலம் அதிகளவில், பணம் வழங்குவதாக, கூறி மோசடி செய்து விட்டதாக,  முதலீடு செய்த பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள்,  தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்தனர். தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்தவர் கமாலுதீன்.  ராஹத் பஸ் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.  பஸ் தொழிலில் முதலீடு செய்தால், அதிகளவில் பங்கு தருவதாகப் ஏராளமானவர்களிடம் சுமார் 1 லட்சம் முதல் 10 லட்சம் வரை கமாலுதீன் வசூல் செய்து, மாதந்தோறும் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பங்கு தொகையை வழங்கி வந்தார்.  பின்னர், கடந்த இரண்டு ஆண்டாகப் பங்குதாரர்களுக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றி  வந்துள்ளார். இந்நிலையில், கமாலுதீனிடம், பங்குதாரர்கள் கேட்ட போது, கொரோனா தொற்று காரணமாகப் பஸ் சேவை இயங்காததால், பங்கு பணத்தை வழங்க முடியவில்லை. விரைவில் பங்கு பணத்தை வழங்கி விடுவதாகக் கூறி காலம் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று,மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட கமாலுதீன் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இறந்து விட்டார்.


தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தனியார் பஸ் நிறுவனம் மீது 700 கோடி மோசடி புகார் - 12,000 பேரிடம் பணம் வசூல்

ராஹத் நிறுவனத்தின் சொத்து வாரிசுகளான கமாலுதீனின் மனைவி ரேஹானா பேகம், அவரது  மகன்களான அப்சல் ரஹ்மான்ஹாரிஸ் ஆகியோர் உள்ள நிலையில், அவர்களைப் பங்குதாரர்கள் நேரில் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்து, இதற்கு எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறி,அனுப்பி விட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகளவில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், பஸ்சில் முதலீடு செய்வதற்காகத் தனியாகப் பல ஏஜென்ட்கள் மூலம், பணத்தைத் வசூலித்த கமாலுதீன், அந்த வசூல் செய்த பணத்தில், பஸ்களை வாங்காமல், வங்கிகளில் கடன் பெற்று அதன் மூலம், 130 பஸ்களை வாங்கியுள்ளார். பின்னர், பங்குதாரர்களின் முதலீடு மூலம், தனது மனைவி, மகன் மற்றும் பினாமி எனப் பல்வேறு பெயர்களில், பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஹோட்டல்கள், பிரிண்டிங் பிரஸ் எனச் சுமார் 400 கோடிக்கும் மேலாக, கமாலுதீன் சொத்துக்களை வாங்கியது தெரியவந்தது. இதைப் பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளிக்கக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், கமாலுதீன் எங்களிடம் கூறும் போது ராஹத் பஸ் சர்வீஸ்சில், 1 லட்சம் முதலீடு செய்தால், பங்கு தொகை 2 ஆயிரம் ரூபாய் எனவும், 5 லட்சம் முதலீடு செய்தால் 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்தார். இதனை நம்பிய நாங்கள் முதலீடு செய்த நிலையில், முதல் மூன்று மாதம் முறையாகப் பணம் கிடைத்தது. அதன் பிறகு பங்கு தொகை கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவரது மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்தினரிடம் கேட்டால், பணம் இல்லை எனக் கூறுகின்றனர். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல், வெளிநாட்டில் உள்ளவர்கள் எனச் சுமார் 12 ஆயிரம் பேர், 700 கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர வேண்டும்  என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Embed widget