மேலும் அறிய

ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது: 24 மணிநேரமும் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது.

தஞ்சாவூர்: சூப்பர் ஏற்பாடு... திருச்சி ரயில்வே ஜங்ஷனில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் திருச்சி ஜங்ஷனுக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். பயணிகளிடம் இருந்து பொருட்கள் திருட்டு போன்றவையும் தடுக்க முடியும்.

தெற்கு ரயில்வேயில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான திருச்சி ஜங்ஷன், தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாள்கிறது. காலை முதல் இரவு வரை எப்போதும் மக்கள் மற்றும் பயணிகள் நிறைந்து காணப்படும் ரயில்வே ஜங்ஷன் இது என்றால் மிகையில்லை. முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொலைதூர ரயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால் எப்போதும் வெளி மாவட்டத்தில் இருந்தும், இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிகள் இங்கு செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பழைய கண்காணிப்பு கேமராக்களுக்கு பதிலாக தற்போது நிறுவப்பட்டுள்ள புதிய கண்காணிப்பு அமைப்பை ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய துல்லியமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது: 24 மணிநேரமும் கண்காணிக்க அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

திருச்சி ரயில்வே கோட்டம், திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், முக்கிய பகுதிகளை தெளிவாக கண்காணிக்கவும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்யவும் ஒரு அதிநவீன வீடியோ கண்காணிப்பு அமைப்பை நிறுவியுள்ளது. இந்த புதிய அமைப்பை ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி தொடங்கி வைத்தார். அவர், புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டு, கண்காணிப்பு வலையமைப்பு முழுமையாக செயல்படுகிறதா என்பதையும் உறுதி செய்தார்.

சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவு, பழைய சிசிடிவி அமைப்புகளை மாற்றி, இந்த புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ரயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், காத்திருப்பு அறைகள், முன்பதிவு கவுண்டர்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைமேம்பாலம், சுரங்கப்பாதை, ரயில்வே யார்டுகள், முக்கிய நுழைவாயில், கூடுதல் நுழைவாயில்கள் மற்றும் பயணிகள் அதிகம் கூடும் அனைத்து முக்கிய பகுதிகளிலும் மொத்தம் 185 உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திருச்சி ஜங்ஷன் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. இங்கு வரும் பயணிகள் மற்றும் உறவினர்களை அனுப்பி வைக்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் ரூ.2.26 கோடி செலவில் இந்த புதிய ஐபி-அடிப்படையிலான (IP-based) அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பழைய சிசிடிவி நெட்வொர்க்கை விட மிக விரிவான மற்றும் கூர்மையான காட்சிகளை வழங்குகிறது. இதில் முழு ஹெச்.டி. மற்றும் அல்ட்ரா ஹெச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, பிரத்யேக கட்டுப்பாட்டு அறையில் உள்ள பெரிய திரைகளில் காட்சிகள் காண்பிக்கப்படும்.

இந்த அதிநவீன வசதி, பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்தும். திருட்டு, துன்புறுத்தல், சங்கிலி பறிப்பு, அனுமதியின்றி நுழைதல் போன்ற சம்பவங்களை ரயில் நிலைய வளாகத்தில் எங்கு நடந்தாலும் உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இது உதவும். இது பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget