மேலும் அறிய

திருவாரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திருவாரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

திருவாரூர் அடுத்த புலிவலம் தெற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். செல்வகுமார் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் தமிழ்ச்செல்வி தனது இரண்டாவது மகன் மற்றும் செல்வகுமாரின் தாய் தந்தை ஆகியோரோடு வசித்து வருகிறார். செல்வகுமாரின் தாயும், தந்தையும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக வெளியூர் சென்றுவிட்ட நிலையில் நேற்றைய தினம் தமிழ்ச்செல்வியின் தந்தை உடல்நலக்குறைவால் நாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து தனது இரண்டாவது மகனுடன் நேற்று தமிழ்ச்செல்வி நாகப்பட்டினம் சென்றுள்ளார்.
 
இன்று காலை தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போய் இருப்பது தெரியவந்தது. உடனடியாக திருவாரூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 20 சவரன் தங்க நகைகள் கொள்ளை
 
இதேபோல அதே புலிவலம் பகுதியில் நேற்று மதியம் மூதாட்டி ஒருவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பரபரப்பு அடங்குவதற்குள் இன்று அதே பகுதியில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போய் இருப்பது மேலும் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் திருவாரூர் நகர்ப்பகுதி முழுவதும் நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் கொள்ளையர்களை பிடிப்பதில் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நகைகளை பறிகொடுத்தவர்கள் கூறும் அளவைவிட காவல்துறையினர் மிகக் குறைந்த அளவே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். காவல்துறை சார்பில் பல்வேறு ரோந்து பணிகள் நடைபெற்று வந்தாலும், பெரும்பாலும் திருட்டு சம்பவங்கள் இரவு நேரங்களிலேயே நடைபெறுவதால் காவல்துறையினர் அதிக அளவில் நகர்ப் பகுதி மற்றும் நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவு ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருவாரூர் நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
ABP Premium

வீடியோ

கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
தவெக-விற்கு தாவுகிறாரா வைத்திலிங்கம்? ஓ.பி.எஸ்.சிற்கு விரைவில் டாடா? பறிபோகும் ஆதரவாளர்கள்!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
தனியார் பள்ளிகளுக்கு தனி பாடத்திட்டம்; கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு எதிராக நீதிமன்றம்: தனியார் பள்ளிகள் சங்கம் அதிரடி!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
Ather 450 X: ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் மைலேஜ்.. Ather 450 X இ ஸ்கூட்டர் விலை, தரம் இதுதான்!
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
Embed widget