மேலும் அறிய

திருச்சியிலிருந்து 1327 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அலைமோதும் மக்கள் கூட்டம்

திருச்சி நகரத்திற்குள்ளும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்: பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வரும் மக்கள் கூட்டம் பேருந்திற்காக அலைமோதுகிறது.

பண்டிகை காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதும், உறவினர்களைச் சந்திப்பதும் வழக்கம். இதனால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்டத்தைச் சமாளிப்பதற்காகவே சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களுக்காகவே இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பண்டிகை காலத்தில் பிற மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இதனால் வழக்கத்தை விட அதிகளவில் பயணிகள் கூட்டம் இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் வெகுவாக குறைவதோடு மக்கள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இருப்பினும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் பேருந்து கிடைக்காமல் மக்கள் அலைமோதுகின்றனர்.

திருச்சியில் பண்டிகை கால கூட்டத்தை சமாளிக்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்  திருச்சி மண்டலம், சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி கடந்த திங்கட்கிழமை முதல், பல்வேறு நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த பேருந்து முனையமான பஞ்சப்பூரில் இருந்து,  நாளை 15ம் தேதி வரை சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,327 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

மேலும், திருச்சி நகரத்திற்குள்ளும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதல் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இவை தவிர, சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களுக்கு சுமார் 405 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிக்கெட் வாங்க பணமில்லா UPI கட்டண முறையைப் பயன்படுத்தும்படி பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 சதவீதத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த சிறப்புப் பேருந்து சேவை, பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். வழக்கமான பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு, இந்த சிறப்புப் பேருந்துகள் ஒரு நல்ல மாற்றாக அமையும்.

மேலும், பயணிகளின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகவும் எளிதாகவும், வேகமாகவும் டிக்கெட் வாங்க உதவும். பணப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்புப் பேருந்துகள், பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயணிகளுக்கு சிரமமின்றி பயணிக்கவும் உதவும். கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் கடந்த 2 நாட்களாக வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. 

பயணிகள், தங்களுக்குத் தேவையான இடங்களுக்குச் செல்ல, இந்த சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை பேருந்து நிலையங்களில் தெரிந்து கொள்ளலாம். பண்டிகை காலங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ோக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் நெரிசலில் அதிகளவில் உள்ளது. மேலும் அதிகாலை முதல் பயணிகள் தங்கள் பகுதிக்கு செல்ல பேருந்து இல்லாமல் அலைமோதுகின்றனர். இன்று போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மேலும் பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget