மேலும் அறிய

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. நடுரோட்டில் கொலை செய்த செங்கோட்டையன்.. அதிர்ந்த ஈரோடு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சொத்து தகராறில் மனைவியைக் கொலை செய்தததாக செங்கோட்டையன் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1995ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. எனினும் விஜயாவை விட்டு விட்டு செங்கோட்டையன் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். இப்படியான நிலையில் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு பெருந்துறையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு விஜயா வழக்கு போட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. 

அப்போது விஜயாவுக்கு ரூ.3.81 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், மாதம் ரூ.4,500 வழங்க வேண்டும் எனவும் செங்கோட்டையனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்பதால் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன்.  அப்போது ஒரே முறையாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என விஜயாவின் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள தனது 55 சென்ட் நிலத்தை விற்பனை செய்து பணத்தை செங்கோட்டையன் தயார் செய்து வந்துள்ளார். ஆனால் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என விஜயா முறையிட்டுள்ளார். 

இதனையறிந்த செங்கோட்டையன் விஜயா மீது கடும் கோபம் கொண்டார். அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி டிசம்பர் 7ம் தேதி மதியம் காஞ்சிக்கோவில் சாலையில் விஜயா நடந்து சென்ற நிலையில் அவரை செங்கோட்டையன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டையன் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம் 

கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தனது உறவினருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் கொலை செய்து அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் துரோகத்தின் சம்பளம் மரணம் என பதிவேற்றம் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி ஸ்ரீபிரியாவை கொலை செய்து அப்படி பதிவிட்டிருந்தார். கணவரை பிரிந்து கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த ஸ்ரீபிரியா, உறவினருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை கண்டு ஆத்திரத்தில் பாலமுருகன் இச்செயலை செய்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Special bus: சொந்த ஊர் செல்ல ரெடியா! 1000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முழு தகவல் உள்ளே..
Special bus: சொந்த ஊர் செல்ல ரெடியா! 1000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முழு தகவல் உள்ளே..
சென்னை வந்த பயணியின் சூட்கேஸில் இருந்த 'அந்த' பொருள்! ரூ.10 கோடி மதிப்பைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!
சென்னை வந்த பயணியின் சூட்கேஸில் இருந்த அந்த பொருள்! மதிப்பைக் கண்டு அதிர்ந்த அதிகாரிகள்!
வெயிலுக்கு நடுவே ஜில்லுனு ஒரு செய்தி! தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களில் நாளை கனமழை - உங்கள் ஊர் இருக்கா?
வெயிலுக்கு நடுவே ஜில்லுனு ஒரு செய்தி! 6 மாவட்டங்களில் நாளை கனமழை - உங்கள் ஊர் இருக்கா?
TVK Vs DMK ; அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து - பரபரப்பு புகார் அளித்த TVK வேட்பாளர்
TVK Vs DMK ; அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து - பரபரப்பு புகார் அளித்த TVK வேட்பாளர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
WB Election 2026: மே. வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 142 தொகுதிகள், பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
WB Election 2026: மே. வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - 142 தொகுதிகள், பவானிபூரில் மம்தா Vs சுவேந்து
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll: தமிழ்நாடு முதல் மே. வங்கம் வரை! 2021 சட்டமன்ற தேர்தலில் கணித்ததும், நடந்ததும் என்ன? ஓர் அலசல்
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Exit Poll : எக்ஸிட் போல் VS தேர்தல் முடிவுகள்.. 2021-ல் திமுக வெற்றியை முன்கூட்டியே கணித்த சர்வே.. இந்த முறை எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Puducherry Exit Poll: 2021-ல் சரியாகக் கணித்த எக்ஸிட் போல்.. ரங்கசாமியின் வெற்றியை உறுதி செய்த தரவுகள்! 2026-ல் எப்படி?
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
Exit Polls 2026: 5 மாநிலங்களில் ஆட்சியமைப்பது யார்? - நாளை வெளியாகும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு!
TVK VIJAY : ‘இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக உறுதியளித்தாரா விஜய்?’ போர்க்கொடித் தூக்கும் அமைப்புகள்..!
இந்து நம்பிக்கையை பின்பற்றுவதாக எழுதிக்கொடுத்தாரா விஜய்?
MK STALIN : இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி.! தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்- அடித்து சொன்ன ஸ்டாலின்
Embed widget