மேலும் அறிய

ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. நடுரோட்டில் கொலை செய்த செங்கோட்டையன்.. அதிர்ந்த ஈரோடு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சொத்து தகராறில் மனைவியைக் கொலை செய்தததாக செங்கோட்டையன் என்பவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள மாந்தம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவர் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 1995ம் ஆண்டு விஜயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. எனினும் விஜயாவை விட்டு விட்டு செங்கோட்டையன் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டார். இப்படியான நிலையில் தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என கேட்டு பெருந்துறையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு விஜயா வழக்கு போட்டார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. 

அப்போது விஜயாவுக்கு ரூ.3.81 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும், மாதம் ரூ.4,500 வழங்க வேண்டும் எனவும் செங்கோட்டையனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தன்னால் அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என்பதால் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார் செங்கோட்டையன்.  அப்போது ஒரே முறையாக ரூ.15 லட்சம் கொடுக்க வேண்டும் என விஜயாவின் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது. இதனையடுத்து காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள தனது 55 சென்ட் நிலத்தை விற்பனை செய்து பணத்தை செங்கோட்டையன் தயார் செய்து வந்துள்ளார். ஆனால் பெருந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் அந்த நிலத்தை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என விஜயா முறையிட்டுள்ளார். 

இதனையறிந்த செங்கோட்டையன் விஜயா மீது கடும் கோபம் கொண்டார். அவரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி டிசம்பர் 7ம் தேதி மதியம் காஞ்சிக்கோவில் சாலையில் விஜயா நடந்து சென்ற நிலையில் அவரை செங்கோட்டையன் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டையன் மீது பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம் 

கடந்த வாரம் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தனது உறவினருடன் தகாத உறவு வைத்திருந்த மனைவியை கணவன் கொலை செய்து அதனை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில் துரோகத்தின் சம்பளம் மரணம் என பதிவேற்றம் செய்திருந்தார். நெல்லை மாவட்டம் தருவை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் தனது மனைவி ஸ்ரீபிரியாவை கொலை செய்து அப்படி பதிவிட்டிருந்தார். கணவரை பிரிந்து கோவையில் தனியார் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்த ஸ்ரீபிரியா, உறவினருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை கண்டு ஆத்திரத்தில் பாலமுருகன் இச்செயலை செய்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
யார் அந்தப் பொய்க்கால் குதிரை? - எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய தவெகவின் பதிலடி அறிக்கை
யார் அந்தப் பொய்க்கால் குதிரை? - எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய தவெகவின் பதிலடி அறிக்கை
யாருக்கு எந்த பொறுப்பு? - 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிப் போட்ட தமிழ்நாடு அரசு; முழு விபரம்
யாருக்கு எந்த பொறுப்பு? - 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றிப் போட்ட தமிழ்நாடு அரசு; முழு விபரம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
Embed widget