மேலும் அறிய

Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

அகிலனின் 'தாமரை நெஞ்சம்' கதைநாயகி துக்கம் பொங்கி வரும்போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள். நான் ஒரு நாட்டியம் ஆடி விடுவேன். அது என் துயரைத் தீர்க்கும் - நர்த்தகி நட்ராஜ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் நாட்டியக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நட்ராஜ். சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் வரலாற்றில், மாநிலத் திட்டக் குழுவில் திருநங்கை ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு, மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திராவிட முன்னேற்றக் கழக அரசுகளின் முன்னெடுப்புகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

வாழ்க்கை வரலாறு: 

நர்த்தகி நடராஜ், மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர். இளமையில் வைஜெயந்தி மாலாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர், கடின முயற்சியால் கிட்டப்பா பிள்ளையிடம்  பரதக் கலையை முறையாக கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இவரை தன் சொந்த மகளாகவே பார்த்த கிட்டப்பா பிள்ளைதான், இவருக்கு 'நர்த்தகி' என்ற பெயரை சூட்டினார்.

திறமை, சாதனை, பெயர், புகழ் என்பதைத் தாண்டி, பரதம் என்பதை  தன்னுள் புதைந்திருக்கும், தனக்கான, தன்னைப் பற்றிய அடையாளத்தை மீட்கும் ஒரு வாய்ப்பாகவே கருதினார். சிறு வயதிலேயே, தன்னுடைய பிறப்பால் அமைந்த பால் அடையாளத்தை மறுக்க தொடங்கினார். இதன் காரணமாகவே, அவர்  வீட்டைவிட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.  

"பெண்மையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாகப் பரதம் இருந்தது. பரதத்தில் ஊறித் திளைத்தபோது பெண்மை புதிதாகப் பிறந்தது. பரதத்தில் பெண்மையை வெளிப்படுத்தும் நொடி இருக்கிறதே, அது வார்த்தைகளில் சொல்ல முடியாத உணர்வு. நதியலையில் விழுந்த இலைபோல, காற்றில் பறக்கும் இறகுபோல, மனம் அதன்போக்கில் செல்லும். எல்லாக் கட்டுகளையும் உடைத்தெறிந்த நிம்மதி அந்த வினாடியில் கிடைக்கும். ஒருவகை ஆழ்ந்த மயக்கம். கனவுலகின் சஞ்சாரம். அந்த விநாடியில் உலகத்தையே மறந்து பறந்துகொண்டிருப்பேன்" என்கிறார் நர்த்தகி.   


Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

 

2007-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு “கலைமாமணி” விருதினை அளித்தது. நர்த்தகி நடராஜ், இந்தியாவின் மிக உயரிய விருதான ’பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்ற முதல் திருநங்கை ஆவார். 2019-ஆம் இந்திய அரசு இவருக்கு ’பத்ம ஸ்ரீ’ விருதினை அளித்தது. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இவரின் கலை பங்களிப்பை பாராட்டி, "மதிப்புறு முனைவர் பட்டம்" (Doctor Of Letters) வழங்கியது. 2011-ஆம் ஆண்டு இந்திய அரசின் இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு கிடைத்தது.    

மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவில் நர்த்தகி  :

'வளர்ச்சி' என்ற ஒற்றை அச்சாணியில் இன்றைய அரசியல் சொல்லாடல்கள் சுழன்று வருகிறது. இன்றைய உலகம் ஒட்டுமொத்த மனித உணர்வுகளையும், ‘வளர்ச்சி' என்ற ஒற்றைக் கட்டமைப்பில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழுத்தறிவு, வாழ்க்கைத்தரம், தனிநபர் வருமானம், ஆண்-பெண் உரிமைகள், போன்ற பல்வேறு அளவுகோல்களை வைத்து மனித வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. 

பொருளாதார நடவடிக்கைகளில் பெண்களை( குறிப்பாக திருநங்கைகளை) ஈடுபத்துவதைத்தான் பாலின சமத்தும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது குறைந்து வருவது கவலை அளிப்பதாக பொருளாதார ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொழிலாளர் சந்தைகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சமஊதியம், சமவாய்ப்பு என்ற அளவில்தான் பாலின சமத்துவங்கள் கற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொருளாதார ரீதியாக, அனைத்து வாதங்களும் முக்கியத்துவம் பொருந்தியது என்பதில் மறுப்பேதுமில்லை. இவை பெரும்பாலும், ஒரு ஆண்மையக் கோட்பாட்டின் மூலம் இயங்குகிறது. 


Narthaki Nataraj : மாநிலக் கவுன்சிலில் ஒரு திருநங்கை! - தேவை என்ன?

 

குடும்ப கட்டுப்பாடு திட்டங்களில் ஆண்கள் பங்களிப்பு என்ன?  மறு உற்பத்தியில் பெண்களின் முடிவெடுக்கும் விகிதம் என்ன? பாலியல் வன்முறைகள், குடும்ப வன்முறைகள் , வரதட்சனை கொடுமைகளுக்கான அடிப்படை வாதம்தான் என்ன? போன்ற எந்த அடிப்படை கேள்விகளுக்கும் பதில் தேடுவதாய் 'வளர்ச்சி' இருக்க வேண்டும். 

"மற்ற மானுடரைவிட எல்லாச் சோதனைகளையும் இரண்டு மடங்கு அனுபவித்திருக்கிறேன். வலிதான் நான் கொடுத்த விலை. அகிலனின் 'தாமரை நெஞ்சம்' கதைநாயகி துக்கம் பொங்கி வரும்போதெல்லாம் ஒரு சொம்புத் தண்ணீர் குடிப்பாள். நான் ஒரு நாட்டியம் ஆடி விடுவேன். அது என் துயரைத் தீர்க்கும்" என்று கூறிய நர்த்தகி நடராஜை மாநில வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக்கியதன் மூலம், "பாலின சமநிலையை வெளிப்படுத்துவதற்கான ஊடகமாக வளர்ச்சி  இருந்தது. பாலின சமநிலையில் ஊறித் திளைத்தபோது வளர்ச்சி புதிதாகப் பிறந்தது"என்ற வாசகம் தமிழ்நாட்டு அரசியலில் எழுதப்படட்டும். 
    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
Embed widget