மேலும் அறிய

Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!

தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நியமித்த அவினாஷ்குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். 

தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகள் நியமனமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக  இருந்த அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டார். 

உளவுத்துறை டிஐஜியாக அஸ்ரா கார்க்

இந்த நிலையில் தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இப்படியான நிலையில் உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

அஸ்ரா கார்க் பின்னணி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மின்னணு பொறியாளர். எனினும் காவல்துறை மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக 2004ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது  காவல் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மதுரையிலும் பணியாற்றியுள்ளார். தென்மாவட்டத்தில் தலைவிரித்தாடிய கந்து வட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தினார். மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு தொடர்பான சம்பவங்களில் எந்த அழுத்தத்திற்கும் அதிரடி காட்டினார். அதன்பின்னர் தர்மபுரி, தேனி,தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றிய அவருக்கு டிஜஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.  

சில ஆண்டுகாலம் மத்திய அரசு பணியில் இருந்த மீண்டும் 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்தார். அவரது கண்காணிப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு இருந்தது. கரூர் விவகாரத்தை விசாரிக்க இவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நபரானார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
கள்ளக்காதல் விபரீதம் ; கணவன் , அக்காவை ஜன்னல் வழியே பெட்ரோல் ஊற்றி எரித்த முதல் மனைவி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Embed widget