Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்.

வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் நியமித்த அவினாஷ்குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் இடமாற்றம் செய்து, புதிய அதிகாரிகள் நியமனமானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், நிதித்துறைச் செயலராக இருந்த உதயச்சந்திரன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த அமுதா உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் முருகானந்தம் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக எம்.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டார்.
உளவுத்துறை டிஐஜியாக அஸ்ரா கார்க்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் உளவுத்துறை டிஐஜியாக வடக்கு மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதனை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். இப்படியான நிலையில் உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ரா கார்க் பின்னணி
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த இவர், அடிப்படையில் ஒரு மின்னணு பொறியாளர். எனினும் காவல்துறை மேல் கொண்ட ஈர்ப்பு காரணமாக 2004ல் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது காவல் பணியைத் தொடங்கிய அவர், பின்னர் 2008ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து மதுரையிலும் பணியாற்றியுள்ளார். தென்மாவட்டத்தில் தலைவிரித்தாடிய கந்து வட்டி கொடுமை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றை கடுமையாக கட்டுப்படுத்தினார். மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு தொடர்பான சம்பவங்களில் எந்த அழுத்தத்திற்கும் அதிரடி காட்டினார். அதன்பின்னர் தர்மபுரி, தேனி,தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றிய அவருக்கு டிஜஜியாக 2018ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
சில ஆண்டுகாலம் மத்திய அரசு பணியில் இருந்த மீண்டும் 2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்தார். அவரது கண்காணிப்பின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு இருந்தது. கரூர் விவகாரத்தை விசாரிக்க இவர் அதிகாரியாக நியமிக்கப்பட்டவுடன் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நபரானார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















