மேலும் அறிய

Toll Plaza : நாளை முதல் சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது... விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் எவ்வளவு தெரியுமா ?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் நாளை 1-ஆம் தேதி முதல் விலை உயர்கிறது:- ரூ.5 முதல் ரூ.15 வரை விலை அதிகரிக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாகிறது. அதனடிப்படையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் வரும் 1-ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்க வரி கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி வரையிலான 74 கிலோ மீட்டர் தூரத்திற்கான நான்கு வழிச்சாலையை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது.

சென்னையில் இருந்து வட மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்ல கூடிய இந்த விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆண்டுத்தோறும் செப்டம்பர் மாதத்தில் வாகனங்களுக்கான சுங்க வரி கட்டண விலை உயர்த்தப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இந்த ஆண்டிற்கான திருத்தப்பட்ட புதிய கட்டண விவரங்களை அந்த சுங்கச்சாவடி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க இதுநாள் வரை ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 5 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டு 105 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 150 ரூபாயில் இருந்து 155 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், இலகுரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க 180 ரூபாயில் இருந்து 185 ரூபாயாகவும், பலமுறை பயணிக்க 265 ரூபாயில் இருந்து 270 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேப்போல் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.15 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
Semester Exam Time Table: அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்; எப்போது?- ஆண்டு அட்டவணை வெளியீடு
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Embed widget