மேலும் அறிய

Vanniyars Reservation: எம்பிசி & சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர்கள் - ஆர்டிஐ சொல்வது என்ன?

Vanniyars Reservation: வன்னியர்கள் 10.5சதவிகிதத்தை காட்டிலும் அதிக இடஒதுக்கீட்டு பலன்களை அனுபவிப்பதாக, தகவல் அறியும் உரிமைச்ச சட்டம் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.

Vanniyars Reservation: மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீரமரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர்களே ஆதிக்கம் செலுத்துவதாக ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் - ஆர்டிஐ தகவல்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடுகளால்,  வன்னியர்கள் தான் அதிகம் பயன் பெறுவதாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.  தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள சில குறிப்பிட்ட பிரிவினர் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி,  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எனும் ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்காக 20 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், வன்னியர்கள் எப்படி பலன் அடைந்துளனர் என்பது தொடர்பான ஆர்டிஐ தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

”20% இடஒதுக்கீட்டில் அதிக பலன் பெறும் வன்னியர்கள்”

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-4 தேர்வுகளில் 2012-2022 வரை 26,784 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். அதாவது வன்னியர்க மட்டும் 19.5 சதவிகிதமாகும்.
  • அதே காலகட்டத்தில் குரூப்-2 தேர்வுகளில் மொத்தம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 2,682 பேர். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரில் மொத்தம் தேர்ச்சி பெற்றோர் 366 பேர். இவர்களில் 20 சதவீதத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியர்கள் மட்டும் 270 பேர். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் நியமன வாரியத்தின் கீழ் 2013-2022ம் ஆண்டுகளில், 1,919 பேர் காவல் உதவி ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 605 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 327 பேர். அதாவது 17 சதவிகிதத்தினர்.
  • 2013 மற்றும் 2022க்கு இடையில் தமிழ்நாடு மருத்துவ சேவை நியமன வாரியத்தினால் பணியமர்த்தப்பட்ட 8,379 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 1,433 பேர் நியமனம் பெற்றனர். இவர்களில் வன்னியர்கள் 1,185 பேர்.இது மொத்த நியமனங்களில் 17.1 சதவிகிதமாகும்.
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 3,044 முதுநிலை ஆசிரியர்களில் 17.5 விழுக்காடு ஆசிரியர்கள், அதாவது 383 பேர் வன்னியர்கள். 
  • 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 24,330 மாணவர்களில்,  மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் 4,873 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் வன்னியர் சமுயதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 2,781 மாணவர்கள். இது 11.4 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.8 சதவிகிதம் அதாவது 3,354 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.
  • மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 6,966. இதில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1,363 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வன்னிய சமுதாய மாணவர்கள் மட்டும் 940 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இது 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.5 சதவிகித வன்னிய மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்தம் 6,234 இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினருக்கான இடங்கள் 933. இதில் வன்னியர்கள் 437 பேர். இது 10.7 சதவிகிதமாகும்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 751. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த 137 பேர் பல் மருத்துவ கல்லூரி பட்ட மேற்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது மொத்த இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 11.2 சதவிகிதமாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் வாயிலாக, பாமக தற்போது கோரி வரும் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை காட்டிலுமே, அதிக அளவில் இடஒதுக்கீட்டால் வன்னியர்கள் பயனடைந்து வருவதை காட்டுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Saibaba statues removed : Israel Lebanon war : போர்க்களத்தில் ABP NEWS! பதற வைக்கும் காட்சிகள்Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Udhayanidhi Pawan Kalyan: சனாதன தர்மம் - சாபம் விட்ட பவன் கல்யாண், துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
Breaking News LIVE OCT 4: சாபம் விட்ட பவன் கல்யாண்.. Wait and See என பதிலடி கொடுத்த துணைமுதல்வர் உதயநிதி
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Air Force Show Chennai: விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
விமானப்படை சாகச நிகழ்ச்சி.. சுவாரசிய தகவல்களை பகிர்ந்த தமிழக வீரர்கள்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுக்கும் ஆற்றல் சுகாதாரத்துறைக்கு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுக்கும் ஆற்றல் சுகாதாரத்துறைக்கு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Embed widget