மேலும் அறிய

Vanniyars Reservation: எம்பிசி & சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டில் ஆதிக்கம் செலுத்தும் வன்னியர்கள் - ஆர்டிஐ சொல்வது என்ன?

Vanniyars Reservation: வன்னியர்கள் 10.5சதவிகிதத்தை காட்டிலும் அதிக இடஒதுக்கீட்டு பலன்களை அனுபவிப்பதாக, தகவல் அறியும் உரிமைச்ச சட்டம் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.

Vanniyars Reservation: மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீரமரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில், வன்னியர்களே ஆதிக்கம் செலுத்துவதாக ஆர்டிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் - ஆர்டிஐ தகவல்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடுகளால்,  வன்னியர்கள் தான் அதிகம் பயன் பெறுவதாக, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்கள் விளக்குகின்றன.  தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள சில குறிப்பிட்ட பிரிவினர் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில், கடந்த 1989ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சரான கருணாநிதி,  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர்மரபினர் எனும் ஒரு பிரிவை உருவாக்கி அவர்களுக்காக 20 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், வன்னியர்கள் எப்படி பலன் அடைந்துளனர் என்பது தொடர்பான ஆர்டிஐ தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

”20% இடஒதுக்கீட்டில் அதிக பலன் பெறும் வன்னியர்கள்”

  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப்-4 தேர்வுகளில் 2012-2022 வரை 26,784 பேர் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 5,215 பேர். அதாவது வன்னியர்க மட்டும் 19.5 சதவிகிதமாகும்.
  • அதே காலகட்டத்தில் குரூப்-2 தேர்வுகளில் மொத்தம் தேர்ச்சி பெற்று நியமனம் பெற்றவர்கள் 2,682 பேர். இவர்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினரில் மொத்தம் தேர்ச்சி பெற்றோர் 366 பேர். இவர்களில் 20 சதவீதத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் பயனடைந்த வன்னியர்கள் மட்டும் 270 பேர். இது மொத்த நியமனங்களில் 11.2 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு சீருடை பணியாளர் நியமன வாரியத்தின் கீழ் 2013-2022ம் ஆண்டுகளில், 1,919 பேர் காவல் உதவி ஆய்வாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 605 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 327 பேர். அதாவது 17 சதவிகிதத்தினர்.
  • 2013 மற்றும் 2022க்கு இடையில் தமிழ்நாடு மருத்துவ சேவை நியமன வாரியத்தினால் பணியமர்த்தப்பட்ட 8,379 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 1,433 பேர் நியமனம் பெற்றனர். இவர்களில் வன்னியர்கள் 1,185 பேர்.இது மொத்த நியமனங்களில் 17.1 சதவிகிதமாகும்.
  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 3,044 முதுநிலை ஆசிரியர்களில் 17.5 விழுக்காடு ஆசிரியர்கள், அதாவது 383 பேர் வன்னியர்கள். 
  • 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 24,330 மாணவர்களில்,  மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில் 4,873 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். அவர்களில் வன்னியர் சமுயதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 2,781 மாணவர்கள். இது 11.4 சதவிகிதமாகும்.
  • தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.8 சதவிகிதம் அதாவது 3,354 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர்.
  • மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மொத்த மாணவர்கள் சேர்க்கை இடங்கள் 6,966. இதில் 20 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1,363 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வன்னிய சமுதாய மாணவர்கள் மட்டும் 940 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர். இது 10.5 சதவிகிதத்தினைவிட கூடுதலாக 13.5 சதவிகித வன்னிய மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் பி.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்தம் 6,234 இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர் மரபினருக்கான இடங்கள் 933. இதில் வன்னியர்கள் 437 பேர். இது 10.7 சதவிகிதமாகும்.
  • பல் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி.எஸ். பட்டப்படிப்பில் உள்ள மொத்த இடங்கள் 751. அதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த 137 பேர் பல் மருத்துவ கல்லூரி பட்ட மேற்படிப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில் வன்னியர்கள் மட்டும் 66 பேர். இது மொத்த இடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீட்டின்படி 11.2 சதவிகிதமாகும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் வாயிலாக, பாமக தற்போது கோரி வரும் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை காட்டிலுமே, அதிக அளவில் இடஒதுக்கீட்டால் வன்னியர்கள் பயனடைந்து வருவதை காட்டுகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
Royal Enfield EV: ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
Embed widget